தேனி அல்லிநகரத்தில் உள்ள உணவகத்தில் இரண்டு நபர்கள் கடந்த சனிக்கிழமை அன்று உணவு சாப்பிட சென்றுள்ளனர் அப்போது ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடும் போது உணவில் முடி இருப்பதாக உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து வேறு புரோட்டா எடுத்து வருவதாக உரிமையாளர் கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ளாத அந்த நபர் உணவில் சுத்தமில்லாமல் முடி இருப்பதாகவும் இதனை வீடியோ எடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்புவேன் என மிரட்டி உள்ளார்.
பின்னர் சிசிடிவி காட்சியை பார்த்த போது உணவு சாப்பிட வந்த நபர் வேண்டுமென்றே தன் உடலில் உள்ள முடியை எடுத்து உணவில் போடுவது தெரிய வந்தது.
இதனை அடுத்து ஹோட்டல் உரிமையாளர், தேனி மாவட்ட ஹோட்டல் சங்க நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஹோட்டல் சங்கத்தினர் சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் புகார் தெரிவித்தனர்
தேனி மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்களில் போலி நிருபர்கள், போலி வழக்கறிஞர்கள் என்ற பெயரில் வரும் நபர்கள் மற்றும் சில கட்சிகளை சேர்ந்த நபர்களும் பணம் கேட்டு இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் இதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்தனர்
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் சரவணன் கூறுகையில் கடைக்கு வந்த இரு நபர்கள் புரோட்டா வேண்டும் என்று கேட்டதாகவும் பின் குழம்பு ஊற்றும் போது அதில் முடி இருப்பதாக கூறி என்னை அழைத்தார்கள்.
நான் வேறு பரோட்டா எடுத்து வருகிறேன் என கூறினேன். ஆனால் அதனை ஏற்க மறுத்து வீடியோ எடுத்து வைத்து உணவு பாதுகாப்பு துறையிடம் அனுப்புவேன் என கூறி மிரட்டியதாக தெரிவித்தார். சம்பவத்திற்கு முன்பு கடையில் வந்து தன்னிடம் குழம்பு கேட்டதாகவும் தான் கொடுக்க மறுத்ததன் காரணமாக இது போல் மிரட்டுவதாக தெரிவித்தார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.