தமிழகம்

முதலமைச்சர் வரும் நேரத்தில் அமைச்சர் பிடிஆருக்கு நெருக்கமானவர் கட்சியில் இருந்து நீக்கம்… அதிர்ச்சியில் மதுரை திமுக!

ஜூன் 1ஆம் தேதி மதுரைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தருகிறார். அவர் தலைமையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இதனால் மாவட்ட செயலாளர்களான அமைச்சர் மூர்த்தி, தளபதி, மணிமாறன் ஆகியோர் கடந்த மே 23ஆம் தேதி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினர். ஆனால் அதே நாள் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்தினார் மேயர் இந்திராணி.

இதையும் படியுங்க: சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பிரபல தனியார் மருத்துவமனையில் கொடூரம்!

ஒரே நாள் ஒரே நேரத்தில் கவுன்சிலர் கூட்டத்தை மேயர் கூட்டியதால், பல கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். ஆனால் இந்த கூட்டத்தை அதிமுக ஆதரவுடன் நடத்தி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னணியில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் உள்ளதாக கூறப்பட்டது. அவர் மீது புகார்களும் எழுந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக பொன் வசந்த்தை தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நெருக்கமான ஆதரவாளராக பொன் வசந்த் அறியப்படுகிறார். முதலமைச்சர் வரும் சமயத்தில் அமைச்சரின் ஆதரவாளர் நீக்கப்பட்டுள்ள மதுரை திமுகவுக்குள் உட்கட்சி பூசலை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.