Categories: தமிழகம்

பிரபல தொழிலதிபரை தாக்க லாரிகளில் வந்த கூலிப்படை : இடத்தகராறால் அரங்கேறிய பயங்கரம்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி.. கும்பலுக்கு போலீசார் வலை!!

கோவை கணபதி அலுமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் கணபதி ராமகிருஷ்ணாபுரத்தில் மோட்டார் பம்ப் நிறுவனம் நடத்தி வருகிறார்.

அதே பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பாலகிருஷ்ணன் என்பவருக்கும் கார்த்திகேயனுக்கும் இடத்தகராறு இருந்து வருகிறது. இதே போல பாலகிருஷ்ணனுக்கு அப்பகுதியில் உள்ள பலரிடமும் தகராறு இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பல முறை புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14 மாதத்திற்கு முன்பு பாலகிருஷ்ணன் செல்வபுரத்தை சேர்ந்த பாட்டில் மூடி வியாபாரம் செய்யும் ராமசந்திரன் என்பவரை கார்த்திகேயனுக்கு சொந்தமான இடத்தில் கம்பெனி வைக்க முயற்சித்த போது தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நள்ளிரவு 2 மணியளவில் பாலகிருஷ்ணனும் ராமசந்திரனும் இரண்டு லாரிகளில் சுமார் 75 பேரை கூட்டி வந்து கார்த்திகேயனின் குடோன் பூட்டை உடைத்து லாரிகளில் இருந்த ராமசந்திரனின் பொருட்களை இறக்கி வைத்து கொண்டிருந்தனர்.

இதை அறிந்த கார்த்திகேயன் அங்கு சென்றார். இதுகுறித்து அவர் பாலகிருஷ்ணன் மற்றும் ராமச்சந்திரனிடம் கேள்வி எழுப்பியபோது தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில்
பாலகிருஷ்ணனும் ராமசந்திரனும் அங்கே கீழே இருந்த இரும்பு ராடுகளை எடுத்து கார்த்திகேயனை சரமாரியாக தாக்கினார்கள்.

இதில் கார்த்திகேயனுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தோடியது. மேலும் அந்த கும்பல் கார்த்திகேயனை ஓட ஓட விரட்டி தாக்க துவங்கினர். அங்கிருந்து விளாங்குறிச்சி சாலைக்கு ரத்த காயங்களுடன் அலறியபடி வந்த கார்த்திகேயனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அங்கிருந்த கும்பல் தாங்கள் வந்திருந்த லாரி மற்றும் பொருட்களை விட்டு விட்டு தப்பி சென்றனர்.

பின்னர் படுகாயமடைந்த கார்த்திகேயன் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணன் , ராமசந்திரன் மற்றும் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் கார்த்திகேயன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குள் நடைபெற்று வரும் மோதல் மற்றும் அடிதடி சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப் படாமல் இருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

1 day ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

1 day ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

1 day ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

1 day ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

1 day ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

1 day ago

This website uses cookies.