கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர்.. நிருபர்கள் எழுப்பிய கேள்வி : அதிர்ச்சியில் கே.என் நேரு!!!
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் சத்திரம் பேருந்து நிலையம், மேல சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா அவர்களின் ருஉருவ சிலைக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் மாலை அணிவிக்கும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் திமுக தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு பேசியது.. இன்று அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நானும் இணைந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மகளிர்களுக்கு வழங்க உள்ளோம்.
இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் பள்ளிகளை துறை அமைச்சர் கலந்து கொள்கிறார் அதே போன்று ,சேலத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளோம்.
தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை குறித்த எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அவர், இந்த நேரத்தில் இதைப்பற்றி பேச வேண்டாம் என தெரிவித்தார்.
மயிலாடுதுறை சீர்காழியில் உள்ள அருள்மிகு சட்டநாதர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து உள்ளீர்கள் என்ன வேண்டுதல் என்று செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர், இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன் என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.