பணிகளை வேகமாக முடிக்க மாட்டீங்களா? மாநகராட்சி அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட எம்எல்ஏ!!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தென்தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நான்கு நாட்களாக கனமழை பெய்துவருகிறது இதனால் மாணவரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சிறுசிறு தெருக்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட காமராஜபுரம் பகுதி 46 வது வார்டு இந்திராநகரில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கனமழையால் அந்த பகுதி குளம் போல நீர் சூழ்ந்துள்ளது.
அப்பகுதி பொதுமக்கள் வெளியே வீட்டை விட்டு வெளியே வரக்கூட முடியாத நிலையில் உள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் முறையாக வேலை செய்யாத மாநகராட்சி அதிகாரிகளை சரமாரியாக சாடி கேள்வி எழுப்பினார்.
விரைவில் மழை நீரை வெளியேற்றி பாதாள சாக்கடையின் அடைப்பை முறையாக சீர்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.