பல்லடம் அருகே பணப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் பாரதிய ஜனதா கட்சியில் பணப் பாளையம் கிளை தலைவராக உள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் டைமண்ட் என்பவர் கடைகளுக்கு டீ தூள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
தமிழ்ச்செல்வன் மற்றும் டைமண்ட் ஆகிய இருவரும் இன்று பல்லடம் அருகே ராயர் பாளையம் பகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது கையில் பட்டா கத்திகளுடன் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் இருவரையும் சுற்றி வளைத்து பட்டாகத்தியால் தாக்கியுள்ளனர்.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதை கண்ட எட்டு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த தமிழ்ச்செல்வன் மற்றும் டைமண்ட் ஆகிய இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பின் தமிழ்ச்செல்வன் தற்பொழுது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தப்பி ஓடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடி வினோத் கண்ணன் என்பவர் அதே பகுதியில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதே பகுதியில் கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.