தமிழகம்

மருமகனை அறையில் அடைத்து கொடுமைப்படுத்திய மாமியார்.. 100க்கு அழைத்தும் வராத போலீஸ் : ஷாக் சம்பவம்!

தருமபுரி அருகே கடகத்தூர் அடுத்த மாட்டியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தூதரையான் கொட்டாய் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் மருமகன் சிவக்குமாரிடம் மாமனார் ரங்கநாதன் மாமியார் ரத்னா இருவரும் சேர்ந்து 7 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். கடன் பெற்று 10 ஆண்டுகள் கடந்த நிலையில் சிவக்குமாரின் சின்ன மாமனார் கோவிந்தன் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சிவகுமாருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் நெருக்கடி வந்துள்ளது. இதனை சமாளிக்க கடன் கொடுத்த மாமனார் மாமியார் இடத்திலும் சின்ன மாமனார் இடத்திலும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

இதனால் இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மருமகனுக்கும் மாமியார் குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் மாமியார் கிராமத்தில் ஊர் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவிற்கு மருமகன் பேத்தி மற்றும் மகளை அழைத்துள்ளனர். நீண்ட நாள் பேச்சுவார்த்தை இல்லாததால் சிவகுமார் மற்றும் ஒரு மகள் ஆகிய இருவரும் திருவிழாவிற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாமனார் ரங்கநாதன் மாமியார் ரத்னா மற்றும் சின்ன மாமனார் கோவிந்தன் சில அடி ஆட்களுடன் நேற்று இரவு சுமார் 10 மணிக்கு மேல் சிவக்குமாரை தாக்க முயற்சித்த போது சிவகுமார் தன் மகளுடன் வீட்டிற்குள் சென்று தாலிட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல் வீட்டின் கதவை வெளியில் தாளிட்டு கடப்பாரை கம்பியால் கதவை பல இடங்களில் குத்தி தகர்த்துள்ளனர். மேலும் ஜன்னல் வழியாக கற்கள், கம்பு மற்றும் பீர் பாட்டிலை கொண்டு தாக்கியதில் வீடு முழுவதும் கண்ணாடி பாட்டில்களாக உடைந்து சிதறியது.

மேலும் கற்களை எடுத்து கதவின் மீதும் ஜன்னல் வழியாகவும் எரிந்து தாக்கி உள்ளனர். இதனால் சிவகுமார் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற வந்தபோது அவர்களையும் கல்லால் எரிந்ததால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊர் மக்கள் சென்று விட்டனர்.

இதனை அடுத்து சிவக்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் எண்ணான 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு காப்பாற்றும்படி கூறியுள்ளார். அவர்கள் தருமபுரி மதிகோன்பாளையம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு இணைப்பை துண்டித்து விட்டுள்ளனர்.

மதிகோன்பாளையம் காவல் நிலைய எண் தெரியாததால் சிவக்குமாரின் மகள் 100 காவல் அவசர உதவிக்கு போன் செய்துள்ளார்.

அவர்கள் மதிகோண்பாளையம் காவல் நிலையத்திற்கு தெரிவித்து வர சொல்வதாக கூறி உள்ளனர். விடியற் காலை வரை யாரும் வராததால் குடிக்க தண்ணீர் உணவு இன்றி சிவகுமார் மற்றும் அவரது மகள் இருவரும் உள்ளேயே இருந்துள்ளனர்.

இந்த நிலையில் விடியற்காலை 8 மணிக்கு தனது நண்பருக்கு போன் செய்து நாங்கள் இருவரும் வீட்டிற்குள் இருக்கிறோம். வீட்டின் வெளியில் தாளிட்டு சென்று விட்டனர். தங்களுக்கு பசி அதிகமாக இருக்கிறது. வரும் பொழுது எதாவது சிற்றுன்டி வாங்கி வாருங்கள் என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவரது நண்பர்கள் சிலர் இட்லி இரண்டு பொட்டலம் வாங்கி வந்து கதவைத் திறந்து கொடுத்த பின்னர் இருவரும் பசிக்கு சாப்பிட்டு உள்ளனர்.

இதுகுறித்து சிவகுமார் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த மாமனார் மற்றும் மாமியார், சின்னமாமனார் மற்றும் அடியாட்களுடன் சென்று தாக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உயிருக்கு ஆபத்து என கூறி மாவட்ட அலுவலக அவசர தொடர்பு எண் 1077 மற்றும் காவல் துறை அவசர எண் 100க்கு தகவல் தெரிவித்தும் 12 மணி நேரம் எந்த காவல்துறையும் எட்டிப் பார்க்காத சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

1 hour ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

2 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

3 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

4 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

4 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

4 hours ago

This website uses cookies.