மூத்த மகளை பள்ளி வேனில் ஏற்றி விட்ட தாய் : பின்னால் ஒடி வந்த ஒன்றரை வயது குழந்தை… சற்று நேரத்தில் அரங்கேறிய சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2022, 1:20 pm
Salem Accident - Updatenews360
Quick Share

சேலம் அருகே தனியார் பள்ளி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே லத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் காசி. இவருக்கு வேதவர்ஷினி மற்றும் பவானிஸ்ரீ என்று 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் வேதவர்ஷினி அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகின்றார்.

மகள் வேதவர்ஷினியை பள்ளி வாகனத்தில் தாய் சுதா ஏற்றி விட்டுள்ளார். அப்போது குழந்தை பவானிஸ்ரீயும் பின்னால் வந்துள்ளார். இதனை தாய் சுதா கவனிக்கவில்லை என்று தெரிகின்றது.

இந்த நிலையில் குழந்தை பவானிஸ்ரீ மீது தனியார் பள்ளி பஸ்சின் பின் சக்கரம் ஏறியது. இந்த விபத்தில் குழந்தை பவானிஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் சுதா கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தலைவாசல் போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 526

0

0