Categories: தமிழகம்

கோவையில் பிரபல KMCH மருத்துவமனையில் நடந்த கொலை.. காவலாளிகள் 12 பேர் அதிரடி கைது : பகீர் சம்பவம்..!!

கோவை சிட்ரா பகுதியில் தனியார்(கேஎம்சிஎச் ) மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி உள்ளது.இந்த மருத்துவமனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த மருத்துவமனை காவலாளிகள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

பின்னர் காயமடைந்த அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து பீளமேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் காந்திமா நகர் பகுதியில் சேர்ந்த ராஜா என்ற மணி என்பவரும் ஏற்கனவே குற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க: பிரபல தனியார் பள்ளியில் மாணவர்கள் செலுத்தும் கல்வி கட்டணத்தில் கையாடல்.. ரூ.26 லட்சத்தை ஏப்பம் விட்ட பெண் பணியாளர்!

இதனை அடுத்து பீளமேடு காவல் நிலையத்தில் ராஜாவின் மனைவி சுகன்யா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் காவலாளி உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .

தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அவரது மனைவி தெரிவிக்கையில் சிகிச்சைக்காக அங்கு சென்றவரை அடித்து கொலை செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.