கோவை சிட்ரா பகுதியில் தனியார்(கேஎம்சிஎச் ) மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி உள்ளது.இந்த மருத்துவமனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த மருத்துவமனை காவலாளிகள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
பின்னர் காயமடைந்த அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து பீளமேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் காந்திமா நகர் பகுதியில் சேர்ந்த ராஜா என்ற மணி என்பவரும் ஏற்கனவே குற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க: பிரபல தனியார் பள்ளியில் மாணவர்கள் செலுத்தும் கல்வி கட்டணத்தில் கையாடல்.. ரூ.26 லட்சத்தை ஏப்பம் விட்ட பெண் பணியாளர்!
இதனை அடுத்து பீளமேடு காவல் நிலையத்தில் ராஜாவின் மனைவி சுகன்யா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் காவலாளி உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .
தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அவரது மனைவி தெரிவிக்கையில் சிகிச்சைக்காக அங்கு சென்றவரை அடித்து கொலை செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
This website uses cookies.