தூத்துக்குடி 3வது மையில் எப்சி குடோன் அருகில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடியின் லாரி செட் உள்ளது.
இங்கு கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஞானராஜ் (வயது 55) என்பவர் காவலாளியாக இருந்து வருகிறார், நேற்று இரவு 10-க்கும் மேற்பட்ட லாரியும் நிறுத்தப்பட்டிருந்தன.
இன்று அதிகாலை எழுந்த லாரி ஓட்டுனர்கள் லாரி செட் தண்ணீர் தொட்டி அருகே ஞானராஜ் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு தென்பாகம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எதற்காக காவலாளி ஞானராஜ் கொலை செய்யப்பட்டார் ? எப்போது கொலை செய்யப்பட்டார், கொலையை செய்த குற்றவாளிகள் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஜெயக்கொடியின் நண்பர் ஜெயக்குமார் என்பவர் குடித்துவிட்டு சுற்றி திரிந்துள்ளார். இதனால் அவரது ஆசிரியை மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து இருந்து வருகிறார்.
இந்நிலையில் நண்பர் ஜெயக்குமாருக்கு ஜெயக்கொடி தனது லாரி செட்டில் வேலை கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர் குடிபோதையில் சுற்றித்திரிந்ததால் ஜெயக்குமாரை வேலைக்கு வேண்டாம் என கூறி ஜெயக்கொடி வேலையில் இருந்து நிறுத்தி உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் ஜெயக்கொடி லாரி செட் அலுவலகத்துக்கு வந்து தனது துணிகள் உள்ளே இருப்பதாகவும் கேட்டை திறந்து விடும்படியும் காவலாளி ஞானராஜிடம் கேட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட இடத்தில் ஜெயக்குமாரின் செருப்புகள் உள்ளதால் கொலை சம்பவத்தை அவர் செய்திருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் தீவிரமாக அவரைத் தேடி வருகின்றனர்.
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
This website uses cookies.