Categories: தமிழகம்

விஸ்வரூபம் எடுக்கும் கொடைக்கானல் விவகாரம்… கட்டிடத்துக்குள் மறைத்து வைத்த பொருள்.. சிக்கிய பாபி சிம்ஹா!!

விஸ்வரூபம் எடுக்கும் கொடைக்கானல் விவகாரம்… கட்டிடத்துக்குள் மறைத்து வைத்த பொருள்.. சிக்கிய பாபி சிம்ஹா!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில் பிரபல நடிகரான பாபிசிம்ஹா தனது நிலத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியை சேர்ந்த ஜமீர் என்பவர் கட்டிடம் க‌ட்டும் பணிகளை மேற்கொண்டார்,

மேலும் 90 சதவிகித பணிகள் முடிந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் பாபிசிம்ஹாவிற்கும் ஒப்பந்தகாரர் ஜமீருக்கும் க‌ட்டிட‌ க‌ட்டுமான‌ ச‌ம்ம‌ந்த‌மாக‌ முரண்பாடுகள் ஏற்பட்டு கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது/

மேலும் பாபிசிம்ஹா ஒப்பந்தகாரருக்கு பல லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என சொல்லப்படுகிறது. மேலும் ஜமீர் அவரது தந்தை இருவரும் பாபிசிம்ஹாவிடம் பணம் கேட்கும் போது பாபிசிம்ஹா முதியவர் என்று பாராமல் ஜ‌மீரின் த‌ந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஒப்பந்தகாரர் ஜமீரின் உறவினரான உஷேன்,பாபிசிம்ஹா இருவரும் பள்ளி நண்பர்களாக‌ இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக
இந்த கட்டிட பணி ஒப்பந்தம் ஜ‌மீருக்கு கிடைத்ததால் இது குறித்து ஜமீர் உஷேனிடம் தெரிவித்தாக சொல்லப்படுகிறது.

இதன் அடிப்படையில் உஷேன் பாபிசிம்ஹாவிட‌ம் அறிவுரை கூற முற்பட்ட போது இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது, இதனையடுத்து உஷேனுக்கு சொந்த‌மான தங்கும் விடுதி செண்பகனூர் பகுதியில் உள்ளது.

இந்த விடுதிக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி பாபிசிம்ஹா மற்றும் கேஜிஎப் படத்தின் வில்லன் நடிகரான ராமசந்திரா ராஜி மற்றும் அடையாளம் தெரியாத இருவர் உள்ளிட்ட நான்கு நபர்கள் சென்றதாகவும் இந்த விஷயத்தில் தலையிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும்,அதிக சத்தம் எழுப்பியதாகவும் விடுதியில் இருந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து விடுதியின் மேலாளர் காவல் நிலையத்திலும் ,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி க்கும் புகார் அளித்துள்ளனர், இதன் அடிப்படையில் கடந்த 10ஆம் தேதி தபாலில் வரப்பெற்ற புகார் அடிப்படையில் பாபிசிம்ஹா மற்றும் ராமசந்திரா ராஜி அடையாளம் தெரியாத இருவர் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒப்பந்தகாரரின் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பாபிசிம்ஹா திருடி க‌ட்டிட‌த்திற்குள் வைத்துள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆம் தேதி பாபிசிம்ஹா கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஒப்பந்தகாரர் ஜமீர் மற்றும் அவரது தந்தை,ஒப்பந்தகாரரின் உறவினர் உஷேன், பேத்துப்பாறை மகேந்திரன் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 3வது நபர் உஷேன் தற்போது பாபிசிம்ஹா மற்றும் கேஜிஎப் வில்லன் ராமசந்திரா ராஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு தரப்புகளில் இருந்தும் மாறி மாறி கொடுக்கப்படும் புகார்களால் தொடர்ந்து இரண்டு தரப்புகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவது தற்போது காவல் நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.