Categories: தமிழகம்

விஸ்வரூபம் எடுக்கும் கொடைக்கானல் விவகாரம்… கட்டிடத்துக்குள் மறைத்து வைத்த பொருள்.. சிக்கிய பாபி சிம்ஹா!!

விஸ்வரூபம் எடுக்கும் கொடைக்கானல் விவகாரம்… கட்டிடத்துக்குள் மறைத்து வைத்த பொருள்.. சிக்கிய பாபி சிம்ஹா!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில் பிரபல நடிகரான பாபிசிம்ஹா தனது நிலத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியை சேர்ந்த ஜமீர் என்பவர் கட்டிடம் க‌ட்டும் பணிகளை மேற்கொண்டார்,

மேலும் 90 சதவிகித பணிகள் முடிந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் பாபிசிம்ஹாவிற்கும் ஒப்பந்தகாரர் ஜமீருக்கும் க‌ட்டிட‌ க‌ட்டுமான‌ ச‌ம்ம‌ந்த‌மாக‌ முரண்பாடுகள் ஏற்பட்டு கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது/

மேலும் பாபிசிம்ஹா ஒப்பந்தகாரருக்கு பல லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என சொல்லப்படுகிறது. மேலும் ஜமீர் அவரது தந்தை இருவரும் பாபிசிம்ஹாவிடம் பணம் கேட்கும் போது பாபிசிம்ஹா முதியவர் என்று பாராமல் ஜ‌மீரின் த‌ந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஒப்பந்தகாரர் ஜமீரின் உறவினரான உஷேன்,பாபிசிம்ஹா இருவரும் பள்ளி நண்பர்களாக‌ இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக
இந்த கட்டிட பணி ஒப்பந்தம் ஜ‌மீருக்கு கிடைத்ததால் இது குறித்து ஜமீர் உஷேனிடம் தெரிவித்தாக சொல்லப்படுகிறது.

இதன் அடிப்படையில் உஷேன் பாபிசிம்ஹாவிட‌ம் அறிவுரை கூற முற்பட்ட போது இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது, இதனையடுத்து உஷேனுக்கு சொந்த‌மான தங்கும் விடுதி செண்பகனூர் பகுதியில் உள்ளது.

இந்த விடுதிக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி பாபிசிம்ஹா மற்றும் கேஜிஎப் படத்தின் வில்லன் நடிகரான ராமசந்திரா ராஜி மற்றும் அடையாளம் தெரியாத இருவர் உள்ளிட்ட நான்கு நபர்கள் சென்றதாகவும் இந்த விஷயத்தில் தலையிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும்,அதிக சத்தம் எழுப்பியதாகவும் விடுதியில் இருந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து விடுதியின் மேலாளர் காவல் நிலையத்திலும் ,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி க்கும் புகார் அளித்துள்ளனர், இதன் அடிப்படையில் கடந்த 10ஆம் தேதி தபாலில் வரப்பெற்ற புகார் அடிப்படையில் பாபிசிம்ஹா மற்றும் ராமசந்திரா ராஜி அடையாளம் தெரியாத இருவர் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒப்பந்தகாரரின் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பாபிசிம்ஹா திருடி க‌ட்டிட‌த்திற்குள் வைத்துள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆம் தேதி பாபிசிம்ஹா கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஒப்பந்தகாரர் ஜமீர் மற்றும் அவரது தந்தை,ஒப்பந்தகாரரின் உறவினர் உஷேன், பேத்துப்பாறை மகேந்திரன் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 3வது நபர் உஷேன் தற்போது பாபிசிம்ஹா மற்றும் கேஜிஎப் வில்லன் ராமசந்திரா ராஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு தரப்புகளில் இருந்தும் மாறி மாறி கொடுக்கப்படும் புகார்களால் தொடர்ந்து இரண்டு தரப்புகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவது தற்போது காவல் நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

5 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

5 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

5 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

6 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

6 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

7 hours ago

This website uses cookies.