பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாட்கோ அலுவலக பதிவு எழுத்தரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடிவடிக்கை எடுத்தனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பதிவு எழுத்தர் சுரேஷ் குமார் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வட பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த குணசீலன் என்பவர் தாட்கோவில் தனது மனைவிக்கு மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெறுவதற்காக பதிவு எழுத்தர் சுரேஷ்குமாரை அணுகி உள்ளார்.
அப்போது சுரேஷ்குமார் குணசீலனிடம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து குணசீலன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரை அணுகி புகார் தெரிவிக்கவே லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் ரூபாயை குணசீலனிடம் கொடுத்து சுரேஷ்குமாரிடம் கொடுக்குமாறு அனுப்பினர்.
இதனை அடுத்து சுரேஷ்குமார் 10 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்றபோது மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.