தமிழகம்

பொங்கல் விழாவில் இளைஞரை சரமாரியாக வெட்டிய முதியவர்… கூட்டத்துக்குள் நடந்த பகீர் சம்பவம்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார். அதே பகுதியை சேர்ந்த பாலு மற்றும் தீபா தம்பதியருக்கு மூன்று பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை உள்ளன.

இதில் மூத்த மகளான மதுமிதாவை அருண்குமார் என்பவர் ஒரு தலை பட்சமாக காதலித்து வந்ததாகவும் பாலு வீட்டிற்கு சில மாதங்களுக்கு முன் பெண் கேட்டு சென்றுள்ளனர். பாலு மற்றும் தீபா இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதையும் படியுங்க: ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு…. அமைச்சர் மீது நீலம் பண்பாடு மையம் பகீர் குற்றச்சாட்டு!!

திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் அருண்குமார் பாலு மற்றும் தீபா குடும்பத்தின் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இது சம்பந்தமாக இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்து பின்னர் சமரசம் பேச்சு முடித்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாட்டுப் பொங்கல் என்பதால் செம்மேடு கிராமத்தில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் அருண்குமார் தம்பி டெல்லி பாபு மற்றும் மதுமிதாவின் தந்தை பாலு இருவரும் ஒன்றாக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர்.

அப்போது டெல்லி பாபுவிடம் அண்ணன் அருண்குமார் வந்து அவன் தான் எனக்கு பொண்ணு தரவில்லை நீ ஏன் அவனிடம் சேர்ந்து டான்ஸ் ஆடுகிறாய் என்று கேட்டதாகவும், இதனை தொடர்ந்து பாலுவிடம் அருண்குமார் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது பாலுவின் மனைவி தீபாவையும் மற்றும் சஞ்சனா வயது 19 பெண்ணையும் அருண்குமார் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாலு கத்தியால் அருண்குமாரை வெட்டி உள்ளார்.

ரத்த வெள்ளத்தில் இருந்த அருண்குமாரை மற்றும் தீபா மகள் சஞ்சனா மூவரையும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சையின் போது மது போதையில் இருந்த அருண்குமார் அவதூறு வார்த்தைகளால் பேசி தகராறு ஈடுபட்டார்
மேலும் மேல் சிகிச்சைக்காக அருண்குமாரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து வந்த குடியாத்தம் கிராமிய காவல்துறையினர் அருண்குமாரை வெட்டிய பாலுவை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு தலை காதல் பெண் கேட்டு தராத விரக்தியில் பொங்கல் விழாவின்போது பெண்ணின் தந்தையிடம் தகராறு ஈடுபட்டதால் பெண்ணின் தந்தை கத்தியால் வெட்டிய சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.