Categories: தமிழகம்

காணாமல் போன மகனை கண்டுபிடித்து தர முதலமைச்சரிடம் முறையிட்ட மூதாட்டி : அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்ட CM…

புதுச்சேரி : காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தர கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் தூத்துக்குடியை சேர்ந்த மூதாட்டி மனு அளித்தார்.

தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் குருசாமி, பேச்சியம்மாள் தம்பதியினர். இவர்கள் அங்கு சலவைத்தொழில் செய்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் ரவி (30). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு புதுச்சேரி வந்த போது விபத்து ஒன்றில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பேச்சியம்மாவிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து 2019 ஆண்டு முதல் புதுச்சேரிக்கு கடந்த 2 ஆண்டுகளாக பல முறை வந்து தேடிவிட்டு செல்கிறார்.

மேலும் புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இருந்தாலும் அரசு மருத்துவமனை, புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் தேடி அலைந்த பேச்சியம்மாள் தனது மகனை தேடுவதற்காக சுமார் 60 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார். தன்னிடம் வைத்துள்ள பையில் மகனை கண்டுபிடிக்க மனுக்கள் ஆகவும், புகைப்படங்கள், தொலைபேசி எண்கள் வைத்துள்ள அவர், சாலைகளில் செல்பவர்களிடம் தனது மகனின் புகைப்படத்தை காண்பித்து மகனை விசாரித்து கண்டுபிடித்து தரும்படி கேட்கிறார்.

இந்த நிலையில் இன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பேச்சியம்மாள் சந்தித்து காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தர கோரிக்கை விடுத்தார். இதையடுத்து உடனடியாக இவரது மகனை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

KavinKumar

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

15 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

16 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

16 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

17 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

18 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

18 hours ago

This website uses cookies.