Categories: தமிழகம்

காணாமல் போன மகனை கண்டுபிடித்து தர முதலமைச்சரிடம் முறையிட்ட மூதாட்டி : அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்ட CM…

புதுச்சேரி : காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தர கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் தூத்துக்குடியை சேர்ந்த மூதாட்டி மனு அளித்தார்.

தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் குருசாமி, பேச்சியம்மாள் தம்பதியினர். இவர்கள் அங்கு சலவைத்தொழில் செய்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் ரவி (30). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு புதுச்சேரி வந்த போது விபத்து ஒன்றில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பேச்சியம்மாவிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து 2019 ஆண்டு முதல் புதுச்சேரிக்கு கடந்த 2 ஆண்டுகளாக பல முறை வந்து தேடிவிட்டு செல்கிறார்.

மேலும் புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இருந்தாலும் அரசு மருத்துவமனை, புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் தேடி அலைந்த பேச்சியம்மாள் தனது மகனை தேடுவதற்காக சுமார் 60 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார். தன்னிடம் வைத்துள்ள பையில் மகனை கண்டுபிடிக்க மனுக்கள் ஆகவும், புகைப்படங்கள், தொலைபேசி எண்கள் வைத்துள்ள அவர், சாலைகளில் செல்பவர்களிடம் தனது மகனின் புகைப்படத்தை காண்பித்து மகனை விசாரித்து கண்டுபிடித்து தரும்படி கேட்கிறார்.

இந்த நிலையில் இன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பேச்சியம்மாள் சந்தித்து காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தர கோரிக்கை விடுத்தார். இதையடுத்து உடனடியாக இவரது மகனை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

KavinKumar

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

23 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

24 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.