தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்தார்.
அப்போது லால்குடி அடுத்து ஆலங்குடி மகாஜனம் கிராம பொதுமக்கள் பேருந்து வசதி கூடுதலாக வேண்டி நேரடியாக கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை முதலமைச்சர் ஏற்று உடனடியாக பேருந்து விடுவதற்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி காலை 8 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கும், காலை 8:35 மணி மற்றும் மாலை 6:05 மணிக்கு ஆலங்குடி மாகாணத்தில் இருந்து லால்குடிக்கும் என தினசரி நான்கு நடைகள் இப்பெயர்ந்துகள் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது.
இவ் வழித்தடத்தில் காலை மற்றும் மாலையில் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் பொதுமக்கள் பள்ளி மாணாக்கர் மற்றும் கட்டணமில்லா மகளிர் எளிதில் பயணம் செய்யும் வகையில் முதல்வர் ஆணைக்கிணங்க நகர பேருந்து மூலம் கூடுதலாக பேருந்து இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை ஆலங்குடி மகாஜனத்திலிருந்து இயக்கப்பட்டது. பேருந்திற்கு முன்பாக பூஜையிட்டு சூடம் ஏற்றி பின்னர் பேருந்து ஓட்டுனர் இயக்கினார்.
முதல்வரிடம் கோரிக்கை வைத்த அடுத்த நாளே பேருந்து இயக்கியதால் முதலமைச்சருக்கு பெண்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் புதிய பேருந்தில் ஏறி பயணம் செய்த பெண்கள் மகிழ்ச்சியில் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.