தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்தார்.
அப்போது லால்குடி அடுத்து ஆலங்குடி மகாஜனம் கிராம பொதுமக்கள் பேருந்து வசதி கூடுதலாக வேண்டி நேரடியாக கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை முதலமைச்சர் ஏற்று உடனடியாக பேருந்து விடுவதற்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி காலை 8 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கும், காலை 8:35 மணி மற்றும் மாலை 6:05 மணிக்கு ஆலங்குடி மாகாணத்தில் இருந்து லால்குடிக்கும் என தினசரி நான்கு நடைகள் இப்பெயர்ந்துகள் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது.
இவ் வழித்தடத்தில் காலை மற்றும் மாலையில் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் பொதுமக்கள் பள்ளி மாணாக்கர் மற்றும் கட்டணமில்லா மகளிர் எளிதில் பயணம் செய்யும் வகையில் முதல்வர் ஆணைக்கிணங்க நகர பேருந்து மூலம் கூடுதலாக பேருந்து இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை ஆலங்குடி மகாஜனத்திலிருந்து இயக்கப்பட்டது. பேருந்திற்கு முன்பாக பூஜையிட்டு சூடம் ஏற்றி பின்னர் பேருந்து ஓட்டுனர் இயக்கினார்.
முதல்வரிடம் கோரிக்கை வைத்த அடுத்த நாளே பேருந்து இயக்கியதால் முதலமைச்சருக்கு பெண்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் புதிய பேருந்தில் ஏறி பயணம் செய்த பெண்கள் மகிழ்ச்சியில் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.