Categories: தமிழகம்

சர்கார் படம் போல் கள்ள ஓட்டு போட்ட நபர்.. இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு… கரூரில் பரபரப்பு

கரூர் : கரூரில் பாலசுப்ரமணி என்பவரது வாக்கை மற்றொருவர் போட்டு விட்டுச் சென்று விட்டதால், தான் வாக்களிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் புனித கார்மேல் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில் வார்டு எண் 12ல், 38 எம் வக்குச்சாவடியில் மாலை 5.45 மணியளவில் பசுபதிபாளையம் தெற்கு தெருவை சார்ந்த பாலசுப்ரமணி (48) என்பவர் வாக்களிக்க வந்துள்ளார். நீண்ட வரிசையில் நின்று அவருடைய வாக்குச் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டையை வாக்கிச்சாவடி அலுவலரிடம் காண்பித்துள்ளார். அவருடைய பெயர் படிக்கப்பட்டது. ஆனால், அவருடைய ஓட்டை ஏற்கனவே பாலசுப்ரமணி என்பவர் ஓட்டு போட்டு விட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த பாலசுப்ரமணி, நான் அனைத்து ஆவணங்கள் வைத்திருந்தும், எனக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால்,கேட்டுவாக்களித்து விட்டு தான் செல்வேன் என வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து வாக்குப் பதிவு நேரம் முடிவடைந்ததால் அங்கு வாக்களிக்க காத்திருந்த பொதுமக்கள் 32 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் போலீசாரும், வாக்குச் சாவடி தலைமை அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மின்னனு வாக்கு இயந்திரத்தில் ஓட்டளிக்க வாய்ப்பு இல்லை என்றும், அதற்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையில் வாக்களிக்க வாய்ப்பு அளிப்பதாக எடுத்துக் கூறினர். ஆனால், அவர் ஏற்க மறுத்து மின்னனு வாக்கு இயந்திரத்தில் தான் வாக்களிப்பேன், என் வாக்கை பதிவு செய்தவர் யார் என்பதை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தன்னிடம் காட்டும்படி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரமாக வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டிருந்தது.

தங்களுடைய மேல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதால் அதுவரை வெளியில் காத்திருக்கும்படி பாலசுப்ரமணியை அனுப்பி வைத்து விட்டு வாக்குப் பதிவு தொடங்கப்பட்டது. அப்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது, பாலசுப்ரமணியை தேட்டிய போது அவர் வாக்குப் பதிவு மையத்தில் இல்லாததால் வாக்குப் பதிவை முடித்தனர் அதிகாரிகள்.

அதன் பின்னர் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புடன் கரூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் வைப்பதற்காக எடுத்துச்சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுமட்டுமில்லாமல் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் வாக்கினை மற்றொருவர் பதிவிட்டு சென்ற காட்சிகளை போல கரூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

KavinKumar

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

16 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

16 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

16 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

17 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

18 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

18 hours ago

This website uses cookies.