பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில்,டாடா காட்டியவாறு குளத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த வாலிபரால் பரபரப்பு அவர் யார் என காவல்த்துறையினர் விசாரணை…
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு-பெரியகுளம் சாலையில் துணைமின் நிலைய தலைமை அலுவலகம் அருகே, சாலையோரமுள்ள வீரன்குளம் கண்மாயின் முன்புறமுள்ள பேருந்து நிறுத்தத்தில் சுமார் 10-க்கு மேற்பட்டோர் பேருந்துக்காக நின்றிருந்தபோது அருகே நின்றிருந்த 35-வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென்று எதிரேயுள்ள குளத்தில் பொதுமக்களுக்கு டாட்டா கட்டியவாறு மளமளவென குளத்தில் இறங்கினார்.
குளத்தின் நடுப்பகுதிக்கு சென்று மாயமாகினார். அவர் குளத்துக்குள் செல்வதை பார்த்துக் கொண்டு நின்றிருந்தவர்கள் உடனடியாக வத்தலக்குண்டு காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
பின்னர், அங்கிருந்த இளைஞர்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் குளத்திற்குள் இறங்கி தேடினர். பின் வெகுநேரம் கழித்து அந்த இளைஞர்கள் அவரை பிணமாக தூக்கி வந்தனர்.
அப்போது அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் டீசர்ட் பாக்கெட் மற்றும் பேண்ட் பாக்கெட்டில் எதுவும் இருக்கிறதா என்று சோதனையிட்டனர்.
சோதனையில் எதுவும் சிக்கவில்லை அங்கிருந்தவர்கள் சில தினங்களாக ப்ளூ டீ சர்ட் அணிந்து இந்த பகுதியில் திரிந்ததாக கூறினர். அங்குள்ள ஒரு டீ கடையில் காலையில் டீ குடித்ததாகவும் கூறினர்.
பின்னர், அந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் அவரது உடலை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.