தமிழகம்

என் வேலை போனதுக்கு நீங்க தான்டா காரணம்… வடமாநில இளைஞர்களை கத்தியால் குத்திய நபர்!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகின்றார்.

இந்த கடையில் பாஸ்கரன் என்பவர் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வந்த நிலையில் பாஸ்கரனுக்கும் கடை உரிமையாளர் சுரேஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாஸ்கரனை வேலைக்கு வர வேண்டாம் என சுரேஷ் கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பாஸ்கரன் அவர் தங்கியிருந்த அறையில் காலை முதலே மது அருந்தி கொண்டு மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் சுரேஷ் தனதுச லூன் கடைக்கு வட மாநிலத்தைச் சார்ந்த இரண்டு இளைஞர்களை புதிதாக வேலை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் வட மாநில இளைஞர்கள் இரண்டு பேரையும் பாஸ்கரன் உங்களால் தான் என்னுடைய வேலை போனதாக கூறி கத்தியை எடுத்து தாக்கி உள்ளார்.

இதில் காயமடைந்த இரண்டு இளைஞர்களையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சலூன் கடை உரிமையாளர் சுரேஷ் தனது கடையில் வேலை செய்து வந்த பாஸ்கரனை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியதாலும் புதிதாக கடைக்கு இரண்டு வட மாநில இளைஞர்களை பணிக்கு அமர்த்தியதால் கோவம் அடைந்த பாஸ்கரன் மது போதையில் கத்தியால் கொலை செய்ய முயன்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.