திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பணப்பாளையம் பகுதியில் விஜயன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் செட் உள்ளது.
நேற்று நியூ இயர் என்பதால் விடுமுறை விடப்பட்டிருந்தது. கடை முன்பு அவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். நேற்று மாலை வெளியில் வந்து பார்த்த பொழுது அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயன் அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பொழுது நேற்று மதியம் 2:30 மணி அளவில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் சிறிது நேரம் அங்கு நின்று யாரும் பார்க்கிறார்களா என நோட்டமிட்டவர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்த இரு சக்கர வாகனத்தை திருடி சென்றார்.
இது குறித்து விஜயன் அளித்த புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.மேலும் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
பட்ட பகலில் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.