Categories: தமிழகம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு : இரவில் சினிமா சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேடன் என்பவர் கட்டிடத் தொழிலாளியாக வேலைப்பார்த்துவருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு திரைப்படம் பார்ப்பதற்காக கல்லுப்பட்டி அருகே உள்ள திரையரங்கிற்குச் சென்று விட்டு அதிகாலை 1 மணியளவில் தனது ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈட்டுப்பட்டிருந்த போலீசார் வேடனைப் பார்த்து அவரிடம் விசாரித்துள்ளனர். பின்பு சந்தேகத்தின் பேரில் வேடனை போலீசார் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணை முடிந்து வேடனை போலீசார் அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். வீட்டிற்கு வந்த அவர் சிறிது நேரம் தூங்கியிருக்கிறார். பின்னர் அவரது பெற்றோர் வேடனை எழுப்பிய போது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேடன் உயிரிழந்ததை உறுதி செய்தனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக வேடனின் உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்திருப்பதாக வேடனின் உறவினர்கள் மருத்துவமனையில் வளாகத்தில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்துவருகின்றனர்.

உசிலம்பட்டி டிஎஸ்பி சம்பவ இடத்திற்கு வந்து வேடனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே என்ன நடந்திருக்கும் என்பது தெரியவரும் என போலீசார் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

39 minutes ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

40 minutes ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

1 hour ago

ஏரியா பக்கம் தலையை காட்டுங்க.. திமுக எம்பியை எதிர்த்து திமுக பெண் கவுன்சிலர் தர்ணா!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…

1 hour ago

படத்துல மட்டும்தான் சமூகநீதி பேசுவாரு? மாரி செல்வராஜின் மறுபக்கம் இதுதான்! போட்டுடைத்த பிரபல நடிகர்…

புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…

2 hours ago

நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் : திருச்சி சிவா எம்.பி எச்சரிக்கை!

கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…

3 hours ago

This website uses cookies.