Categories: தமிழகம்

நடவடிக்கை எடுக்காத போலீஸ்.. காவல் நிலையம் முன்பு மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற 3 பெண்கள்!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த தெத்தி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் சாதிக். இவரது மனைவி சுல்தானி பீவிக்கும் குடும்ப தகராறு காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி பனங்குடி பகுதியில் உள்ள தனது பெரியப்பா மகள் வீட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகிது.

இந்த நிலையில் சுல்தானி பீவி அங்கிருந்து திருப்பூர் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சுல்தானி பீவியை அவரது அக்கா மகன் சர்தார்தான் திருப்பூருக்கு பேருந்து ஏற்றிவிட்டுள்ளார் எனக் கூறி அவர் மீது நாகூர் காவல்நிலையில் ஜெகபர் சாதிக் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சர்தாரை நேற்று காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரனை செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காவல் நிலையத்திற்கு வந்த ஜெகபர் சாதிக் குடும்பத்தினர் சர்தாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அவரது உறவினர்கள் 3பெண்கள் உள்ளிட்ட 5 பேர் காவல் நிலையம் முன்பு திடிரென மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

உடனடியாக அங்கிருந்த போலீசார் தடுக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், தீக்குளிக்க முயன்றவர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனடியாக போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று சமாதனப் படுத்தினர்.

மேலும் படிக்க: கங்கனாவின் கன்னத்தில் பளார் விட்ட CSIF பெண் அதிகாரி.. விமான நிலையத்தில் அதிர்ச்சி.. வீடியோ வெளியிட்டு ஆதங்கம்!

நாகூரில் போலீசாரை கண்டித்து காவல்நிலையம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.