நத்தம் அருகே அனுமதியின்றி வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் இருவர் உடல் சிதறி பலியான சம்பவத்தில் தொடர்புடைய பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம், மேலாளர் அருண் பிரசாத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியை சேர்ந்தவர் சின்னு மகன் செல்வம் (வயது 49). இவர் ஆவிச்சிபட்டி அருகே பூலாமலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் அனுமதியின்றி வெடி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். இந்த ஆலையில் அரியலூர் மாவட்டம் மணிமேகலை நகரை சேர்ந்த ஆனந்தன் மகன் அருண் பிரசாத் (39) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெடி தயாரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் கோவில் காலணி தெருவை சேர்ந்த குருசாமி மகன் கண்ணன் என்ற சின்னன் (வயது 42), சிவகாசி அருகே விஸ்வ நத்தம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் முனீஸ்வரன் என்ற மாசா (வயது 30) இருவர் உடல் சிதறி பலியாகினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் போலீசார் ஆங்காங்கே சிதறிக்கிடந்த இருவரின் உடல் பாகங்களையும் சாக்கு பையில் கட்டி ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, வெடி விபத்தில் தொடர்புடைய பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் (49) என்பவரை நத்தம் அருகே ஏரக்காபட்டியில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மற்றும் பட்டாசு ஆலை மேலாளர் அருண் பிரசாத் (39) என்பவரை நத்தம் வேம்பரளி அருகே காவலர் சோதனை சாவடியில் சோதனையின் போது போலீசார் கைது செய்து இருவரையும் விசாரணை செய்து வருகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.