பிளக்ஸ் பேனர் வைக்க போலீசார் எதிர்ப்பு.. நிர்வாகியை தாக்கியதால் கொந்தளித்த இந்து முன்னணி. மறியலால் பதற்றம்!!
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் பாதுகாப்பு மாநாடு நாளை நடைபெறுகிறது.
இதனையொட்டி புளியம்பட்டியில் பிளக்ஸ் வைப்பதற்காக நகராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் இன்று இந்து முன்னணி அமைப்பினர் பிளக்ஸ் வைத்தனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் பேனர் வைக்க அனுமதி இல்லை என கூறி தடுத்துள்ளனர். அதற்கு இந்து முன்னணியினர் நகராட்சி நிர்வாகத்திடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முறையாக அனுமதி பெற்றுள்ளோம். இதுகுறித்து எஸ்.பி. சிஜடியிடம் கேட்டு பாருங்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அங்கிருந்த போலீசார் அனுமதி மறுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் இந்து முன்னணி அமைப்பினர் ஒருவரை போலீசார் தாக்கியதால் இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தைக்கு நடத்திய பின் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.