நடிகர் தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமல்லாமல் ஹாலிவுட் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் முதன்முதலாக தானே இயக்கி கதாநாயகனாக நடிக்க போகிறார் என்ற செய்தி சமீபத்தில் வைரலானது. இதனிடையே அப்படத்தின் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை திரைப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று யோசித்து உள்ளாராம்.
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே தன் அம்மாவைப் போல தமிழ் சினிமாவிலும் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக ஜான்வி கபூர் தமிழில் வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளாராம்.
அதேபோல தயாரிப்பாளர் போனி கபூரும், ஜான்வி கபூரை தமிழில் அறிமுகம் செய்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனை தெரிந்து கொண்ட தனுஷ் தற்போது தான் இயக்கவிருக்கும் திரைப்படத்தின் கதாநாயகியாக ஜான்பி கபூரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார். ஆனால் இதற்கு போனிகபூர் சம்மதிக்கவே இல்லையாம். ஏனென்றால் நடிகர் தனுஷ் சமீபத்தில் அவரது முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்திருந்தார்.
இதனையடுத்து ரஜினிகாந்திற்கும், தனுஷிற்கும் பல கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், தனுஷிற்கு திரைப்பட வாய்ப்புகள் சரிவர கிடைப்பது இல்லையாம். இதனை அறிந்து கொண்ட போனிகபூர் தன் மகளை தனுஷுடன் சேர்ந்து நடிக்க வைத்தால் ஜான்வி கபூரின் கெரியர் பாதிக்கப்படும் என்பதை அறிந்து தனுஷுடன் நடிக்க வைக்க முட்டுக்கட்டையாக உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் தனுஷ் நடித்த ஒரு சில திரைப்படங்களில் ஜான்வி கபூர் நடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும் போனிகபூர் தனுஷுடன் தன் மகளை நடிக்க வைப்பதில் விருப்பம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே தனுஷ் தற்போது போனி கபூரின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.