விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேலின் மகள் யுவஸ்ரீ , 23 வயதான இவர், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், முதுகலை கணினி அறிவியல் படித்து வருகிறார்.
இதேபோல் வளவனுர் அருகேயுள்ள குமரக்குப்பம் பகுதியை சேர்ந்த சிவகுமாரின் மகன் சக்திவேல் , இவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் .
இந்நிலையில் விழுப்புரம் அடுத்த வளவனூரில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை திருமண மண்டபத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மாணவிக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது.
மேலும் இன்று திருமணம் நடைபெற்ற மாணவி யுவஸ்ரீக்கு கல்லூரியில் தமிழ் செமஸ்டர் தேர்வு இன்று நடை பெறவுள்ளது.
இதனை யுவஸ்ரீ எழுத முடிவு செய்தார். அதன்படி, திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே அவர், மணக்கோலத்தில் அவரது கணவருடன் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்தார்.
அவரை, கல்லூரி பேராசிரியர்கள் வெகுவாகப் பாராட்டினர். தேர்வு எழுதி முடித்த பின்னரே , திருமண சம்பிரதாயங்கள் நடைபெறவுள்ளதால் , மணக்கோலத்தில் யுவஸ்ரீயின் கணவர் கல்லூரி வளாகத்தின் அருகே காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது .
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.