Categories: தமிழகம்

அருள் வாக்கு கேட்க சென்ற பெண்.. ஆடையில்லாமல் நிற்க வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய சாமியார்..!

அருள் வாக்கு கேட்க சென்ற பெண்.. ஆடையில்லாமல் நிற்க வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய சாமியார்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சத்யா என்ற பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார்.

சத்யா தனது கணவன் மற்றும் மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், தனது கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் யூடியூபில் மாந்திரீகம் தொடர்பான வீடியோக்களை பார்த்துள்ளார்.

அப்போது கேரள மாந்திரீகம் என்ற youtube சேனலில் பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள அர்ஜுன் கிருஷ்ணன் என்ற சாமியாரின் வீடியோக்களை பார்த்துள்ளார்.

பின்னர் அர்ஜுன் கிருஷ்ணனின் வராகி அம்மன் கோவிலுக்கு சென்று மாந்திரீக முறையில் தனது கணவன் மற்றும் மகனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

பரிகாரங்கள் செய்ய முன் பணமாக பத்தாயிரம் ரூபாய் கட்டுமாறு அர்ஜுன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பணத்தை கட்டிய பின்,சிறிது நாட்கள் கழித்து பரிகாரம் செய்வதற்கு அதிக செலவாகும் எனவும் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் பரிகார பூஜைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் சாமியார் அர்ஜுன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கணவனுடன் சேர வேண்டும் என்ற ஆசையில் தனது சக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி ஒன்றை லட்சம் ரூபாய் பணத்தை சாமியாரிடம் சத்யா கொடுத்துள்ளார்.

பணத்தை கொடுத்தும் எந்த பூஜைகளையும் செய்யாமல் சாமியார் தாமதித்து வந்த நிலையில் பணத்தை திருப்பித் தருமாறு சத்யா கேட்டுள்ளார்.

தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு சாமியார் தெரிவித்த நிலையில் வீட்டுக்கு சென்ற சத்யாவை கட்டாயப்படுத்தி, வீட்டு கதவுகளை மூடிவிட்டு சத்யாவின் ஆடைகளை அகற்றி வீடியோ எடுத்ததாகவும், அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், இதேபோன்று இரண்டு மூன்று முறை வீட்டுக்கு வரவழைத்து தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், ஒப்புக் கொள்ளாவிட்டால் சத்யாவின் வீடியோவை youtube சேனலில் வெளியிடுவேன் என சாமியார் மிரட்டியதாகவும், பாதிக்கப்பட்ட சத்யா திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க: தந்தை இல்லை.. பனியன் கம்பெனிக்கு சென்று படிக்க வைத்த தாய் : 10ம் வகுப்பு தேர்வில் இன்ப அதிர்ச்சி கொடுத்த இரட்டையர்கள்!

மேலும் தன்னைப் போன்று 50க்கும் மேற்பட்டோர் இதுபோல சாமியார் அர்ஜுன் கிருஷ்ணனால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் எனவும், பணத்தை திருப்பித் தராமல் சாமியார் தலைமுறைவாகி உள்ளார் எனவும், தனது குடும்பத்தில் அவமானப்பட்டு உயிரை விடுவதை விட என் பணத்தை தராவிட்டால் சாமியாரின் கோயில் முன்பு தீக்குளித்து உயிர் துறப்பேன் எனவும் தனது பணத்தை மீட்டுத் தருமாறு சாமியாரின் மொபைல் போனில் உள்ள தனது அந்தரங்க வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும், தன்னைப் போன்று மாந்திரீகத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் பாதிக்கப்பட்ட பெண் சத்யா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் சாமியாரின் கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டு இருப்பதாகவும், சாமியார் அர்ஜுன் கிருஷ்ணன் தலைமறைவாகியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

23 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.