கோவை அன்னூர் அருகே வீட்டில் அவசர நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து ஆம்புலன்ஸ் பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் வாகனகொம்பு பகுதியை சேர்ந்தவர் கோகுல் பிராசாந்த். இவரின் மனைவி வினோதினி (20). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று மாலை வீட்டில் இருக்கும்பொழுது பிரசவ வலி ஏற்பட்டது.
இதுதொடர்பாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறுமுகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது குழந்தையின் தலை வெளியே வந்திருந்தது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் தினேஷ், பைலட் நந்தகோபால் உதவியுடன் பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய் சேய் இருவரையும் சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.