சுயநலத்துடன் அண்ணாமலை எடுத்த மட்டமான முடிவால் தான் பிரச்சனையே : எஸ்வி சேகர் பகீர் குற்றச்சாட்டு!!
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கோயில்களில் குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொள்ள வந்த நடிகரும் பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், தமிழகத்தில் அண்ணாமலை கட்சியை வளர்க்காமல் தன்னை வளர்ப்பதில் ஈடுபட்டு கொண்டிருப்பதால் தமிழகத்தில் பா.ஜ.க ஜீரோவாக இருப்பதாகவும், இந்த தேர்தலில் அண்ணாமலையால் பா.ஜ.க மோசமான விளைவை சந்திக்கும் எனவும்,
2024 தேர்தலில் தமிழகத்தில் அண்ணாமலை 25 இடங்களை பிடித்தால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க 30 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்தார்.
விஜய் அரசியலுக்கு வருவார் என அவரை தவிர எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் சொல்லவில்லை. விஜய் தன்னுடைய ரசிகர் மன்றத்தை சரியாக கட்டமைத்து வைத்துள்ளார். அதன் காரணமாக அவர் அரசியலுக்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகம். ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னார் ஆனால் அவரால் வர முடியவில்லை. விஜய் அரசியலுக்கு வருகிறாரா? இல்லையா? என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.
மேலும், அ.தி.மு.க கூட்டணி முடிவுக்கு அண்ணாமலை தான் காரணம். கட்சியின் நலனை தாண்டி தான் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் அவர் எடுத்த மட்டமான முடிவு. இதனால் தமிழக பா.ஜ.கவிற்கு தான் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும்.
ஆளுநர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தற்செயலாக நடந்த ஒன்று. இதனை அரசியல் ஆக்குவதால் எந்த ஆதாயமும் கிடைக்காது. ஆளுநர் எல்லா விவகாரத்திலும் இதேபோல் செய்து கொண்டிருந்தால் ஆளுகின்ற அரசு மீதுதான் மக்களுக்கு சிம்பதி ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.