தமிழகம்

காமம் பற்றி CLASS.. மாணவிகளிடம் ஆபாசமாக பேசி உணர்ச்சிகளை கொட்டிய பேராசிரியர்!

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த தண்ணீர்பந்தம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியின் முதல்வர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி முதல்வர் கீதா, கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த கல்லூரியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் கெளரவ விரிவுரையாளராக பொள்ளாச்சியைச் சேர்ந்த அருள் செல்வம் பணிபுரிந்து வந்தார்.

இவர் உடை, ஆடை மற்றும் அணிகலன்கள் குறித்து பாலியல் தொந்தரவு செய்யும் வகையில் பேசியதாக 3ஆம் ஆண்டு மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து, காதல், காமம் உணர்ச்சி போன்ற தேவையில்லா ஆபாச பேச்சுகளை கல்லூரியில் பாடம் எடுக்கும் போது பேசுவதாக 28 மாணவிகள் கையெழுத்திட்டு மற்றொரு புகார் மனுவையும் துறைத் தலைவரிடம் அளித்துள்ளனர்.

மாணவிகள் புகார் அளித்து 2 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் மாணவிகளையும், பெண் பேராசிரியர்களையும் அருள்செல்வம் புகைப்படம் எடுத்ததாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் பணியாளர்கள் ஒன்றிணைந்து, காவல் துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அக்காவுக்கு தகவல் அளித்தனர். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அருள்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட நிர்வாகம், மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஆகியோருக்கும் புகார் மனு அளித்தனர்.

இதையும் படியுங்க: லாட்ஜ் அறையில் நிர்வாணமாக கிடந்த ஆண் சடலம்.. ஓட்டல் பெண் ஊழியரின் திடுக்கிடும் வாக்குமூலம்!

இதனை அடுத்து, மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் குணசேகரன், புகார் அளித்த மாணவிகள், பெண் பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.

அதில், மாணவிகள், மாணவர்கள், பெண் பணியாளர்கள் என அனைவரும் கெளரவ விரிவுரையாளர் அருள்செல்வம் மீதான புகார்களை உறுதிப்படுத்தினர்.

இந்த விசாரணை நேற்று இரவு 7.30 மணி வரை நீடித்தது விசாரணையின் முடிவில் கல்லூரியின் முதல்வர்(பொ) கீதா, பாலியல் புகாரில் சிக்கிய கெளரவ விரிவுரையாளர் அருள்செல்வத்தை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து மதுரை மண்டல கல்லூரி இணை இயக்குனரிடம் குணசேகரன் இடம் விளக்கம் கேட்டபோது, “குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கௌரவ விரிவுரையாளர் அருள்செல்வம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் அரசு கலை கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, “புகார் அளித்த மாணவிகள் கௌரவ விரிவுரையாளர் அருள் செல்வம் கல்லூரியில் இருந்து நீக்கினால் போதுமானது என தெரிவித்ததன் அடிப்படையில் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லைமேலும் கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்” என தெரிவித்தனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

6 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

7 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

7 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

8 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

9 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

9 hours ago

This website uses cookies.