Categories: தமிழகம்

பக்கத்து வீட்டு குழந்தையை கத்தியால் குத்திய மென்பொறியாளர்.. தடுக்க வந்தவர்கள் மீதும் கத்திக்குத்து!!

திருச்செங்கோடு அடுத்த சக்திநாயக்கன் பாளையம் பால் சொசைட்டி அருகில் உள்ள குடித் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் செந்தில்குமார், MCA படித்து விட்டு பெங்களூருவில் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட செந்தில்குமார் (29 ) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபு என்பவரது 10 வயது உள்ள தஷ்மிதா பெண் குழந்தையை கத்தியால் வெட்டியுள்ளார்.

குழந்தையின் கதறல் சத்தம் கேட்ட செந்தில்குமாரின் தாயார் சம்பூர்ணம் ஓடி வந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்த தங்கராசுமற்றும் முத்துவேல் ஆகியோர் செந்தில்குமாரை பிடிக்க ஓடிவந்த போது அவர்களையும் கத்தியால் தாக்கியதில் பெண் குழந்தை தக்க்ஷிதாஉயிருக்கு ஆபத்தான நிலையில் விவேகானந்தா மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

படுகாயம் அடைந்த தங்கராசு முத்துவேல் ஆகியோர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஊரக போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

செந்தில்குமார் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து சிகிச்சைக்கு பின் ஓரளவு தேறி வந்ததாகவும் கடந்த மூன்று மாதங்களாக பைக் ஒன்று சம்பந்தமாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் அறையிலேயே யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார்

இந்த நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு பெண் குழந்தைகளில் சோபாவில் அமர்ந்திருந்த தஷ்மிதாவை மட்டும் லேப்டாப் கம்ப்யூட்டர் வைத்திருந்த மேஜை அடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டியுள்ளார்.தடுக்க வந்தவர்களையும் கத்தியால் வெட்டியதில் அனைவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் சக்தி நாயக்கன்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பெங்களூருவில் வேலை பார்த்து வரும் செந்தில்குமார் ஆண்டுக்கு 70 லட்ச ரூபாய் சம்பளம் பெற்று வந்தவர் என கூறப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.