முன்கூட்டியே திமுக அரசு நடவடிக்கை எடுக்காததே மக்கள் பாதிக்க காரணம் : ஆய்வுக்கு பின் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் விமர்சனம்!
தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மீட்பு பணிகள் மிக மிகத் தொய்வாக நடைபெறுவதாகவும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் தெரிவித்தார்.
கடந்த 14ஆம் தேதியே நான்கு மாவட்டங்களுக்கும் மிக கனமழை எச்சரிக்கை இந்திய வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்ட பின்பும் அரசு முயற்சி எடுத்திருந்தால் பொதுமக்கள் இந்த அளவு துயரத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள் எனவும் அரசு இதனை செய்ய தவறிவிட்டது எனவும் முதல்வர் டெல்லி சென்றது பிரதமரை பார்ப்பதற்கு மட்டுமல்ல இந்தியா கூட்டணியில் கலந்து கொள்வதற்கும் சேர்த்து தான் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் மிக்ஜாம் புயலிலும் எந்த அதிகாரியும் முழுமையாக பணி செய்யவில்லை எனவும் ஆய்வு பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு நிவாரண பணிகளுக்கு ரூ.6300 கோடி தேவை என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது விளம்பரத்திற்காகதான். இது மிக வேடிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.