திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சொத்து பிரச்சனை காரணமாக வாய்தாவிற்காக வி.அம்மாபட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர் தாஸ் (வயது 65) வந்திருந்தார்.
காலை 10 மணிக்கு கோர்ட்டுக்கு வந்த அவர் கூட்ட நெரிசல் மற்றும் போதிய வெளிச்சம், காற்றோட்டம் இல்லாமல் அவதிப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி அளவில் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து மூச்சு விட சிரமப்பட்டார். இதனை அறிந்த வழக்கறிஞர்கள் அவரை தூக்கி கோர்ட்டின் வெளியே காற்றோட்டமான பகுதிக்கு கொண்டு வந்தனர்.
அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரின் வழக்கறிஞர் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தார். வேடசந்தூர், சாலையூர் நால்ரோடு, எரியோடு ஆகிய பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் இல்லாததால் திண்டுக்கல்லில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பாகவே கோர்ட்டு வளாகத்தில் பிரான்சிஸ் சேவியர்தாஸ் துடிதுடித்து உயிரிழந்தார். இதனால் கோர்ட்டு வளாகத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
வக்கீல்கள் அனைவரும் தங்களது பணியை நிறுத்திவிட்டு கோர்ட் வளாகத்தில் குவிந்தனர். கோர்ட்டுக்கு வழக்குக்காக வந்திருந்த ஏராளமான வழக்காடிகளும் குவிந்தனர்.
இதனால் கோர்ட்டு வளாகமே மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. கோர்ட்டு வளாகத்திற்குள் போதிய மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என்றும் காற்றோட்ட வசதியையும் ஏற்படுத்தி வழக்காடிகளும் வக்கீல்களும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெயர் சொல்ல விரும்பாத வக்கீல் தெரிவித்தார்.
தகவல் அளித்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கணேஷ், அங்கமுத்து, தனிப்பிரிவு போலீசார் பாலு, அந்தோணி, கோர்ட் போலீசார் உடனடியாக இறந்தவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து பதற்றத்தை தனித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.