பழவேற்காடு கடலில் நண்பர்களுடன் குளித்த இளைஞர் அலையின் சீற்றம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டு மாயமான போலீசார் உடலை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரையில் ரெட்டம்பேடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் பரத் என்கிற சின்னராசு தனது நண்பர்களுடன் கடலில் குளித்த போது அலையின் சீற்றம் காரணமாக உள்ளே இழுத்துச் செல்லப்பட்டு அவர் நீரில் மூழ்கி மாயமானார்.
அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற முடியாமல் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருப்பாலைவனம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடற்கரைப் பகுதியில் பல மணி நேரம் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை.
நேற்று தடை செய்யப்பட்ட படகு சவாரி மேற்கொண்ட போது பழவேற்காடு ஏரியில் அலை சீற்றம் காரணமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் இன்று கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் அலையின் சீற்றத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழவேற்காடு சுற்றுலா தளத்தில் பாதுகாப்பு பணிக்கு திருப்பாலைவனம் காவல்நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லாததால் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாமல் போலீசார் தொடர்ந்து சிரமம் அடைந்து வருகின்றனர். கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.