விழுப்புரம் நகரபகுதிகளில் வீட்டில் பதுக்கி தடைசெய்யப்பட்ட பான்மசாலாவை வினியோகித்த நபரை போலீசார் கைது செய்து 5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா மற்றும் 94 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் நகர பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கடைகளுக்கு தடை செய்யப்பட்ட பான்மசாலா வினியோகிக்கப்படுவதாக டி.எஸ்.பி பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் மணி நகரை சார்ந்த ஹபிப் ரஹ்மான் என்பவரின் வீட்டில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்ததில் பெங்களூருவிலிருந்து தடை செய்யப்பட்ட பான்மசாலாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.
இதனையடுத்து வீட்டில் 14 மூட்டைகளில் 150 கிலோ எடையில் 5 லட்சம் மதிப்பிலான பான்மசாலாவை போலீசார் பறிமுதல் செய்து ஹபிப் ரஹ்மானை கைது செய்தனர். பான் மசலாவை பதுக்கிய நபரிடமிருந்து 94 ஆயிரம் ரொக்க பணத்தையும் பான்மசாலா கடத்தலில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு தடைசெய்யப்பட்ட பான்மசாலா பெங்களூரு பகுதியிலிருந்து காய்கறி வண்டிகள் வாடகை வண்டிகளில் கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூர் பகுதி வழியாக கடத்தப்பட்டு வருவதால் அதனை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாகவும் பான்மசாலா கடத்திய 15 நபர்களின் வங்கி கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளதாக எஸ் பி ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.