Categories: தமிழகம்

தங்கையின் பிறந்தநாளுக்காக சர்ப்ரைஸ் கொடுக்க சென்ற அண்ணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி : வைரலாகும் சிசிடிவி காட்சி!

தங்கையின் பிறந்தநாளுக்காக சர்ப்ரைஸ் கொடுக்க சென்ற அண்ணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி : வைரலாகும் சிசிடிவி காட்சி!

திருச்செந்தூர்- திருநெல்வேலி சாலை குமாரபுரம் பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி மகன் சௌந்தரபாண்டி (22). இவரது தங்கை சௌந்தர்யா. சௌந்தர்யாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் எனது தங்கைக்கு சாக்லேட் வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து கடைக்கு கிளம்பியுள்ளார்.

அப்பொழுது, திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த TN12-Z- 9968 என்ற நம்பர் கொண்ட கார் ஒன்று அதிவேகமாக வந்து சௌந்தரபாண்டி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட சவுந்தரபாண்டி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.

இதைக்கண்ட தங்கை சௌந்தர்யா கூச்சலிடவே அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை மீட்டு திருச்செந்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய காரை மடைக்கு பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

காரில் இருந்து இறங்கிய போதை ஆசாமிகள் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர். இதற்குள் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்த நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் முனியசாமி (29) என்பவரை விசாரணைக்காக திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

படுகாயமடைந்த சுதந்திரபாண்டி சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

விபத்துக் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்த பின்னர், விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் கோர விபத்தை ஏற்படுத்திவிட்டு பொதுமக்களிடம் தகராறு செய்த காரில் வந்த போதை ஆசாமிகளுக்கு ஆதரவாக பேசியதாக அப்பகுதி பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும், இப்பகுதியில் ஏற்கனவே தொடர்ந்து விபத்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது புதிய சாலை அமைக்கப்பட்டு, வேகத்தடை மற்றும் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் இருப்பதால், இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருவதாகவும், அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, இந்த பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி வேகத்தடை அமைத்து மீண்டும் விபத்துக்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்கை பிறந்தநாளுக்கு தங்கைக்காக சாக்லேட் வாங்க போன அண்ணன், தங்கை கண்முன்னே கோர விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இவர் வாய் விட்டால் விளங்குமா? குபேரா படத்துக்கு முதல் விமர்சனத்தை அள்ளித் தெளித்த பிரபலம்!

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…

17 minutes ago

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் அதிமுக.. திமுக அரசுக்கு எதிராக வெளியான அறிவிப்பு..!

திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…

42 minutes ago

பிச்சை எடுத்துப் பாருங்க அருமை புரியும்- நயன்தாராவை டார்கெட் செய்தாரா தனுஷ்?

நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…

1 hour ago

மாயமான 28 வயது பெண் : துடித்துடித்த 4 உயிர்கள்.. விசாரணையில் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…

2 hours ago

ஆர்யா மீது வரி ஏய்ப்பு புகார்? வருமான வரித்துறையினரின் திடீர் சோதனைக்கு காரணம் என்ன?

ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…

2 hours ago

சினிமா மட்டுமல்ல… தொழிலிலும் மாஸ் காட்டும் ஆர்யா.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு!

நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…

3 hours ago

This website uses cookies.