அஸ்தியை கரைத்து அருவியில் குளித்த போது நேர்ந்த அதிர்ச்சி : மதுரையை சேர்ந்த வாலிபர் பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2022, 3:45 pm
Falls Dead - Updatenews360
Quick Share

பழனி அருகே விருப்பாச்சி தலைக்குத்து அருவி‌ பகுதியில் நீரில் மூழ்கி மதுரையைச் சேர்ந்த வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர் அருண்பிரகாஷ் (வயது 32). ஒட்டன்சத்திரத்தில் வசிக்கும் இவரது உறவினர் இறந்ததை அடுத்து, அவரது அஸ்தியை கரைப்பதற்காக உறவினர்களுடன் அருண்பிரகாஷ் பழனி அருகே உள்ள விருப்பாச்சி தலைக்குத்து அருவி பகுதிக்கு வந்துள்ளார்.

அருவியில் அஸ்தியை கரைத்து விட்டு அங்கு குளித்தபோது நீர் விழும் பகுதி அருகே சென்றுள்ளார். அப்போது சுழலில் மாட்டிக் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீசார் மற்றும் ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அருண்பிரகாஷ் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 521

0

0