Categories: தமிழகம்

புது மாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை… விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் தகவல்.!!

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் புது மாப்பிள்ளையை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருந்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி சகாய மாதா தெருவை சேர்ந்தவர் பீட்டர்.இவரது மகன் கவாஸ்கர் ( 34), மீனவர்.
இவருக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆகிறது. நேற்று முன்தினம் மாலையில் கவாஸ்கர் கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்த தனது நண்பர் இருதய ஜான்ஸ் ராஜா (35) என்பவருடன் சேர்ந்து கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் மது அருந்தினர். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் கவாஸ்கரை நண்பர் இருதயஜான்ஸ் ராஜா கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது குறித்து கன்னியா குமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.இருதய ஜான்ஸ் ராஜாவை பிடிக்க இன்ஸ் பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானா பக்கம் உள்ள நரிக்குளம் கரையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கொலையாளி இருதய ஜான்ஸ் ராஜா போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருதய ஜான்ஸ் ராஜா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:- என் தந்தை பெயர் ஜேம்ஸ். எனது தாயார் இறந்த பிறகு எனது தந்தை வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு கன்னியாகுமரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்.

இதனால் நான் வீட்டுக்கு செல்லாமல் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தேன். நான் மீன் பிடி தொழில் செய்து வருகிறேன். என்னுடன் கடலுக்கு மீன் பிடிக்க கன்னியாகுமரி சகாய மாதா தெருவைச் சேர்ந்த எனது நண்பர் கவாஸ்கர் என்பவரும் வருவார். அந்த நட்பு அடிப்படையில் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் நாங்கள் அடிக்கடி அறை எடுத்து மது அருந்தி ஜாலியாக இருந்து வந்தோம். அப்போது என்னிடம் என் நண்பர் கவாஸ்கர் நீ பிரபல ரவுடி மகனுடன் சுற்றித்திரிவது எனக்கு பிடிக்கவில்லை என்றும் அந்த ரவுடியின் மகனுடன் சேர்ந்து பலரை நான் மிரட்டி வந்ததாகவும் கூறி என்னை கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நான் நீ எனக்கு அறிவுரை கூறத் தேவையில்லை என்று கூறினேன். இதனால் எங்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கவாஸ்கரின் கழுத்தில் சரமாரியாக குத்தினேன். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்ததைப் பார்த்து நான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். இவ்வாறு அவர் அந்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார். கைது செய்யப்பட்ட இருதயஜான்ஸ் ராஜாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

KavinKumar

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 days ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.