சூலூர் அருகே நிலக்கரி லோடு ஏற்றி வந்த லாரி பள்ளி பேருந்து மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் லாரியை வலது புறமாக திருப்பியதால் தடுக்கப்பட்ட பெரும் விபத்து சம்பவம் குறித்து வெளியான சிசிடிவி பதப்பதைப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் செந்தில் முருகன், திருநெல்வேலியில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு நிலக்கரி லோடு ஏற்றி வந்துள்ளார்.
கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது கிட்டம்பாளையம் நால்ரோடு அருகே லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
அப்போது வாகரயாம் பாளையத்திலிருந்து கருமத்தம்பட்டி நோக்கி எதிர்ப்புறமாக வந்த தனியார் பள்ளி பேருந்தின் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் லாரியை வலது புறமாக திருப்பினார்.
வலது புறம் இருந்த பேரிகார்டரில் மோதிய லாரி, அங்கிருந்த பேருந்து நிழற்குடை மீது மோதி நின்றது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எதிர்ப்புறம் வந்த தனியார் பள்ளி பேருந்து விபத்திலிருந்து தப்பியது.
லாரி ஓட்டுனரின் சமயோசிதத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்த பகுதியில் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி இருவர் உயிரிழந்த நிலையில் சாலையின் இருபுறமும் பேரிகார்டர்கள் அமைக்கப்பட்டபோதும் இப்பகுதியில் சாலை விபத்துகள் தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.