தர்மபுரி அருகே உள்ள மான்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி(36) இவர் இன்று சோலைக் கொட்டாயில் உள்ள பள்ளியில் தன்னுடைய மகனை விட்டு செல்ல இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது வழியில் மகன் ஜாமின்டரி பாக்ஸ் வேண்டும் என கேட்டுள்ளார்.
அதனை வாங்க சோலைகொட்டாய் பகுதியில் உள்ள ஒரு கடையில் வாங்க தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையை கடக்க நடைமேடையில் நின்றுள்ளார்.
அப்பொழுது பாப்பிரெட்டிபட்டியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்துக்கொண்டு இருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதலை தவிர்க்க தனியார் பேருந்து ஓட்டுனர் இடது புறம் பேருந்தை திருப்பியுள்ளார்.
அப்பொழுது சாலையை கடக்க நடைமேடையில் நின்றிருந்த சின்னசாமி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சம்பவ இடத்திலேயே மகன் கண்முன்னே தந்தை சின்னசாமி உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க: இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறை.. இஸ்லாமியர்கள் இல்லாத முதல் அமைச்சரவை : பாயும் கண்டனங்கள்!
உடனடியாக மதிகோன்பாளையம் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் பேருந்து ஓட்டுனரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.