சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கோனேரிப்பட்டி, பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (47), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி. குடும்பத் தகராறு காரணமாக ஜெயந்தி தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த நான்கு ஆண்டுகளாக பழனிசாமி, ஜெயலட்சுமி (35) என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுடன், ஜெயலட்சுமியின் மகள் கனகவல்லி (18) மற்றும் பழனிசாமியின் மகன் ஆகாஷ் (23) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த 16-ம் தேதி இரவு, பழனிசாமி, கனகவல்லியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், இதற்கு ஜெயலட்சுமி உடந்தையாக இருந்ததாகவும், இந்த தகவலை ஆகாஷிடம் கூறி அழுதுள்ளார் கனகவல்லி.
இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், கோபத்தின் உச்சத்தில், பழனிசாமி மற்றும் ஜெயலட்சுமியை கட்டையால் தாக்கி கொலை செய்தார். பின்னர், கத்தியால் இருவரது உடல்களையும் துண்டித்து, தலை, கை, கால்களை தனித்தனியாக வெட்டினார்.
ஆகாஷ், வெட்டப்பட்ட உடல் பாகங்களை சாக்கு மூட்டைகளில் கட்டி, ஏகாபுரம் ஏரியில் தலை மற்றும் கைகளையும், மகுடஞ்சாவடி அருகே உள்ள அ.தாழையூர் ஏரியில் உடலின் மற்ற பாகங்களையும் வீசினார்.
இதுகுறித்து ஊர்மக்கள் அளித்த புகாரின் பேரில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையைத் தொடர்ந்து, ஆகாஷ் மற்றும் கனகவல்லி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் கனகவல்லியை, ஆகாஷ் காதலித்து வந்ததாகவும், இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்த ஜெயலட்சுமி கண்டித்து பழனிசாமியிடம் கூறியுள்ளார்.
அவள் உனக்கு தங்கை முறை என பழனிசாமி கூறியுள்ளார். இதனால் காதலர்கள் இருவரும்,தாய் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டு, இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
உடல் பாகங்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கொடூர சம்பவம், சேலம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.