Categories: தமிழகம்

ரேஷன் அட்டையால் வந்த வினை.. தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்.!!

ரேஷன் அட்டையால் வந்த வினை.. தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்.!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பல்லரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (50) – அபிராமி தம்பதியினர்.
இவர்களுக்கு தேன்மொழி மற்றும் ஆனந்தகுமார் என இரண்டு திருமணமான மகளும், மகனும் உள்ளனர்.

இதில், தேன்மொழி திருமணமாகி விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டையில் உள்ள தனது கணவருடன் வசித்து வருகின்றார்.

மேலும், ஆனந்தகுமாருக்கு (27)திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், வீட்டில் தாய் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்தகுமார் தனது மனைவி பிள்ளைகளுடன் அருகில் உள்ள சித்தலிங்கமடம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு தனது தந்தை ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற ஆனந்தகுமார். ரேஷன் கார்டில் எனது பிள்ளைகள் பெயர் சேர்க்க வேண்டும் அதற்கு அப்ளிகேஷனில் கையெழுத்து போட வேண்டும் என தந்தையிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க: கிணற்றில் மலம் கலப்பு? விசாரணையில் பரபரப்பு… அடை, தேன் அடை : விழித்த விழுப்புரம்!

அதற்கு தந்தை மறத்ததால் தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆனந்தகுமார் அங்கிருந்த கத்தியை எடுத்து தனது தந்தையை சரமாரியாக வயிற்றில் குத்திவிட்டு தப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஹரி கிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆனந்தகுமாரை கைது செய்து பின்னர், ஹரிகிருஷ்ணனை மீட்டு திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், அவரை புதுச்சேரி அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஹரி கிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுப்பி வைத்துவிட்டு இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது போதையில் தனது தந்தையை மகனே கத்தியால் குத்தியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.