Categories: தமிழகம்

ரேஷன் அட்டையால் வந்த வினை.. தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்.!!

ரேஷன் அட்டையால் வந்த வினை.. தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்.!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பல்லரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (50) – அபிராமி தம்பதியினர்.
இவர்களுக்கு தேன்மொழி மற்றும் ஆனந்தகுமார் என இரண்டு திருமணமான மகளும், மகனும் உள்ளனர்.

இதில், தேன்மொழி திருமணமாகி விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டையில் உள்ள தனது கணவருடன் வசித்து வருகின்றார்.

மேலும், ஆனந்தகுமாருக்கு (27)திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், வீட்டில் தாய் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்தகுமார் தனது மனைவி பிள்ளைகளுடன் அருகில் உள்ள சித்தலிங்கமடம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு தனது தந்தை ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற ஆனந்தகுமார். ரேஷன் கார்டில் எனது பிள்ளைகள் பெயர் சேர்க்க வேண்டும் அதற்கு அப்ளிகேஷனில் கையெழுத்து போட வேண்டும் என தந்தையிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க: கிணற்றில் மலம் கலப்பு? விசாரணையில் பரபரப்பு… அடை, தேன் அடை : விழித்த விழுப்புரம்!

அதற்கு தந்தை மறத்ததால் தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆனந்தகுமார் அங்கிருந்த கத்தியை எடுத்து தனது தந்தையை சரமாரியாக வயிற்றில் குத்திவிட்டு தப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஹரி கிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆனந்தகுமாரை கைது செய்து பின்னர், ஹரிகிருஷ்ணனை மீட்டு திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், அவரை புதுச்சேரி அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஹரி கிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுப்பி வைத்துவிட்டு இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது போதையில் தனது தந்தையை மகனே கத்தியால் குத்தியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 days ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.