Categories: தமிழகம்

தாயிடம் தகராறு செய்த தந்தையை துடிதுடிக்க கொலை செய்த மகன் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…

சென்னை : தாயுடன் தகராறில் ஈடுபட்ட தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கே.கே நகர் அம்பேத்கர் குடில் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவர் நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் வயதான தம்பதியருக்கு உதவிகள் செய்யும் வேலைசெய்து வருகிறார். இவரது கணவர் தேசமுத்து பெயிண்டிங் வேலை செய்துவரும் நிலையில் 4 மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், இன்று தேசமுத்து படுக்கையில் பேச்சு மூச்சின்றி கிடந்ததால் முனியம்மாள் அவரை கே.கே நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததை உறுதிசெய்ததுடன், அவரின் மரணத்தில் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் எம்ஜிஆர் நகர் போலீசார் தேசமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். அதில், நேற்று இரவு குடிபோதையில் தேசமுத்து மற்றும் அவரது மகன் டேவிட் என்ற விஜய்க்கு இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தேசமுத்துவின் இரு மகன்களான விஜய் மற்றும் பாலு ஆகிய இருவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தேசமுத்து குடிபோதையில் காலை முதல் தனது தாய் முனியம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும், இரவும் அதேபோல் தனது தாயைத் திட்டியதால் ஆத்திரத்தில் இரவு அனைவரும் தூங்கிய பின்பு விஜய் தேசமுத்துவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கொலைவழக்கு பதிவுசெய்து டேவிட் என்ற விஜய்யை கைது செய்தனர்.

KavinKumar

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

2 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

3 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

4 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

4 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

5 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

6 hours ago

This website uses cookies.