தாயும் தந்தையும் கடவுளுக்கு சமமாக பார்க்கின்ற இந்த காலத்தில் பெற்ற தாயிடம் இருந்த சொத்தை அபகரித்து விட்டு சொந்த மகனே தாயை நடுத்தெருவில் விட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மூதாட்டி இந்திராணி நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவில் கூறியுள்ளதாவது, மூதாட்டி இந்திராணி நாகர்கோவில் நாகராஜர் கோவில் அருகே உள்ள குறுக்கு சாலையில் வசித்து வருகிறார்.
கணவன் சிதம்பரம் சில வருடங்களுக்கு முன்பு இறந்து இறந்து விட்டார். அவர் சம்பாதித்த சொத்து இந்திராணி கைவசம் இருந்தது.
அவருடைய மகன் பத்மநாபன் பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். பெற்ற தாய் கைவசம் இருந்த சொத்தை அபகரித்து கைவசம் எடுத்து உள்ளார். தாய் இருக்க இடமின்றி நடு ரோட்டில் வந்துள்ளார்.
பலமுறை கேட்டும் மகன் தாயிடம் இந்த சொத்தை கொடுக்க முன்வரவில்லை அதிகாரபூர்வமாக பத்திரப்பதிவு செய்து கூட கொடுக்காமல் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக மூதாட்டி கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மூதாட்டிக்கு சாதகமான தீர்ப்பு நீதிமன்றம் கூறியபின்பும் அதிகாரிகளும் மாவட்ட காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை எனவும் தன் மகனிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தன்னை அலைக்கழிப்பதாகவும் மகன் பத்மநாபன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீர் மல்க நாகர்கோவில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார் இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அலட்சியத்தையும் ஏற்படுத்தி உள்ளது
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.