Categories: தமிழகம்

டெல்லி அவசர மசோதாவுக்கு காட்டிய வேகம்.. மகளிர் சட்ட மசோதாவுக்கு ஏன் இல்லை? சபாநாயகர் அப்பாவு விமர்சனம்!!

டெல்லி அவசர மசோதாவுக்கு காட்டிய வேகம்.. மகளிர் சட்ட மசோதாவுக்கு ஏன் இல்லை? சபாநாயகர் அப்பாவு விமர்சனம்!!

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அவர் கூறுகையில், வருகிற அக்டோபர் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடும் என்றும், அன்று நிதி மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் 2023-2024 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவான்களுக்கு மானிய கோரிக்கைகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உள்ளார் என்று குறிப்பிட்டார்.

அடுத்ததாக செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் கூறினார். நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீத பெண்கள் இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் கூறிய சபாநாயகர் அப்பாவு, சட்ட மசோதா கொண்டு வந்துள்ளனர் அவ்வளவு தான். அதனை நிறைவேற்றுவது கேள்விக்குறி தான் என்று தெரிவித்தார்.

மேலும், இதனை பலமுறை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து அது பல்வேறு காரணங்களால் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. பாஜக இதனை கொண்டு வரவேண்டும் என்றால் 2014ஆம் ஆண்டே செய்திருக்க வேண்டும். டெல்லில் அம்மாநில அரசிடம் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றும் அதிகாரம் இருந்தது.

அதனை டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் மேற்கொண்ட போது அதனை எதிர்த்து டெல்லி அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றமும் டெல்லி அரசுக்கு ஆதரவாக , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உரிமை உள்ளது என தீர்ப்பளித்தது.

ஆனால் உச்சநீதிமன்ற தீர்பபையே மீறி, அவசர அவசரமாக ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படும் படி, டெல்லி மாநில சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அசுர வேகத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு.

ஆனால், பெரும்பாலும் அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ள நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு எனும் மசோதாவை நிறைவேற்ற காலதாமதம் ஆகிறது.

இத்தனையும் டெல்லி மசோதா போல விரைவில் நிறைவேற்ற வேண்டியது தானே.? அதனை விடுத்து விரைவில் மக்கள் தொகை கணக்கெடுத்து, மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்து அதன் பின்னர் 2026, 2027 இல் நிறைவேற்றும்படி உள்ளனர் என விமர்சித்தார் சபாநாயகர் அப்பாவு.

அடுத்து, புதிய நாடாளுமன்றம் துவங்க உள்ளது என்றால், அதற்கு நாட்டின் முதல் குடிமகனாக உள்ள குடியரசு தலைவர் தான் முதலில் அழைக்கப்பட வேண்டும். ஆனால்,குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை, நாடளுமன்றம் கட்டி முடித்து திறக்கப்படும் போதும் அழைக்கவில்லை, இப்போது அலுவல் பணிகள் துவங்கிய முதல் நாளும் அழைக்கவில்லை. இதிலேயே தெரிந்துவிட்டது அவர்கள்(பாஜக) எண்ணங்கள் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.