Categories: தமிழகம்

பள்ளியில் இருந்து அரைநாள் விடுப்பு எடுத்து சென்ற ஆசிரியர்.. வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்… சிக்கிய கடிதம்!!

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்து பி ,பள்ளிப்பட்டி, லூர்த்துபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத் (எ) லியோ (வயது 45) எம்,ஏ எம்,பில் பி,எச்,டி முனைவர் பட்டம் பெற்றவரான இவர் பொம்மிடி அருகே உள்ள பத்திரி ரெட்டி ஹள்ளி அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி தணிகைகேஸ்வரி 40 இவரும் அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார், இவர்களுக்கு தீபன், ரித்திக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

வழக்கமாக பள்ளிக்கு சென்ற ஆசிரியர் நேற்று மதியம் தனது மனைவியிடம் வீட்டிற்கு செல்வதாக தகவல் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

மீண்டும் அவரிடம் இருந்து போன் எதுவும் வராததால் வீட்டில் சென்று பார்க்குமாறு இவரது மனைவி தணிகைகேஸ்வரி கணவரின் தம்பி பீட்டரிடம் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

அவர் உறவினர்களும் சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டபட்டு கிடந்தது. பிறகு ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது ஆசிரியர் அருண்பிரசாத் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

இது குறித்து தாகவல் அறிந்த பள்ளிப்பட்டி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றினர்.

அப்போது ஆசிரியர் அருண்பிரசாத் 12 பக்கம் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் அவர் தனது மரணத்திற்கு தனக்கு வீட்டு மனை நிலம் விற்ற அதே பகுதியை சார்ந்த நாமக்காரர் எனும் சிவசங்கர் மற்றும் அவரது மனைவி ஜெயா 45 வயது ஆகியோர் தான் என் இறப்பு காரணம், இவர்களிடம் வீடுக்கட்ட இடம் வாங்கி வீடு கட்டினேன், அதன் அருகே மேலும் இடம் உள்ளதாகவும் அதனையும் வாங்கிகொள்ள வற்புறுத்தினர்.

இதனால் தனது மனைவி நகை அனைத்தும் அடகு வைத்து 8 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் அவர்கள் எனக்கு அந்த நிலத்தை எழுதிகொடுக்காமல் ஏமாற்றினர். இதனால் பணத்தை திருப்பி கேட்டேன் இதற்கு என் கும்பத்தையும், எனது நண்பர் குடும்த்தினருக்கும் பல்வேறு இடையூர் செய்தனர்.

பொய் வழக்கு போட்டு எனது நண்பரை சிறைக்கு அனுப்பினர். இதனால் நான் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டேன் என எழுதி இருந்தார்.

இது போல் கடந்த இருதினங்களுக்கு முன் தருமபுரியில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தெடர்ந்து நேற்று பொம்மிடி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

23 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

24 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.