தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்து பி ,பள்ளிப்பட்டி, லூர்த்துபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத் (எ) லியோ (வயது 45) எம்,ஏ எம்,பில் பி,எச்,டி முனைவர் பட்டம் பெற்றவரான இவர் பொம்மிடி அருகே உள்ள பத்திரி ரெட்டி ஹள்ளி அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி தணிகைகேஸ்வரி 40 இவரும் அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார், இவர்களுக்கு தீபன், ரித்திக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
வழக்கமாக பள்ளிக்கு சென்ற ஆசிரியர் நேற்று மதியம் தனது மனைவியிடம் வீட்டிற்கு செல்வதாக தகவல் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
மீண்டும் அவரிடம் இருந்து போன் எதுவும் வராததால் வீட்டில் சென்று பார்க்குமாறு இவரது மனைவி தணிகைகேஸ்வரி கணவரின் தம்பி பீட்டரிடம் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அவர் உறவினர்களும் சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டபட்டு கிடந்தது. பிறகு ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது ஆசிரியர் அருண்பிரசாத் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.
இது குறித்து தாகவல் அறிந்த பள்ளிப்பட்டி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றினர்.
அப்போது ஆசிரியர் அருண்பிரசாத் 12 பக்கம் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் அவர் தனது மரணத்திற்கு தனக்கு வீட்டு மனை நிலம் விற்ற அதே பகுதியை சார்ந்த நாமக்காரர் எனும் சிவசங்கர் மற்றும் அவரது மனைவி ஜெயா 45 வயது ஆகியோர் தான் என் இறப்பு காரணம், இவர்களிடம் வீடுக்கட்ட இடம் வாங்கி வீடு கட்டினேன், அதன் அருகே மேலும் இடம் உள்ளதாகவும் அதனையும் வாங்கிகொள்ள வற்புறுத்தினர்.
இதனால் தனது மனைவி நகை அனைத்தும் அடகு வைத்து 8 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் அவர்கள் எனக்கு அந்த நிலத்தை எழுதிகொடுக்காமல் ஏமாற்றினர். இதனால் பணத்தை திருப்பி கேட்டேன் இதற்கு என் கும்பத்தையும், எனது நண்பர் குடும்த்தினருக்கும் பல்வேறு இடையூர் செய்தனர்.
பொய் வழக்கு போட்டு எனது நண்பரை சிறைக்கு அனுப்பினர். இதனால் நான் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டேன் என எழுதி இருந்தார்.
இது போல் கடந்த இருதினங்களுக்கு முன் தருமபுரியில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தெடர்ந்து நேற்று பொம்மிடி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.