Categories: தமிழகம்

ஊசியால் பள்ளி மாணவனின் முகப்பருவை நீக்கிய ஆசிரியை? முகம் வீங்கி பலியான மாணவன் : பெற்றோர்கள் பரபரப்பு புகார்!!

திருவண்ணாமலை : முகப்பரு பிரச்சனையால் பள்ளி மாணவன் முகம் வீங்கி உயிரிழந்த நிலையில் ஆசிரியர்தான் காரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த நம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த சேவத்தான் – செல்லம்மாள் தம்பதியினருக்கு சுதா, அஜித், சிவகாசி, அசோக், சுஹாசினி என 5 குழந்தைகள் உள்ளனர்

இதில் 3வது பிள்ளையான சிவகாசி அங்குள்ள ஜமுனா மரத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட் அரசவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அரசு விடுதியில் தங்கி படித்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதியன்று அப்பள்ளி ஆசிரியை மகாலட்சுமி என்பவர் தொலைபேசி மூலம் சிவகாசியின் தந்தை செவத்தானை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சிவகாசியின் முகம் வீங்கி உள்ளதாகவும் உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, செவத்தான் தனது மகன் சிவகாசியை நம்பியந்தல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

சிவகாசிக்கு முதலுவதவி செய்த மருத்துவர்கள், அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் மாணவனின் உடல்நிலை மோசமானதால் வேலூர் சிஎம்சிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் இறந்துவிட்டதாக கூறினர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில், தன் மகன் இறப்பிற்கு ஆசிரியை முகப்பரு ஊசியை வைத்து சுத்தம் செய்தேதே காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவனுக்கு முகத்தல் சூடு கட்டி வந்ததாவும், நான் துடைத்துதான் விட்டேன், பிறகு அவன் முகம் வீங்கியதால் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தேன் என ஆசிரியர் கூறியுள்ளார்.

ஜவ்வாது மலையில் நடக்கும் அவலங்களை சுட்டுக்காட்டுபவர் என்பதால் அரசியல்வாதிகளுக்கு எனனை பிடிப்பதில்லை அதனால் என்னை பழிவாங்க இப்படியொடு குற்றச்சாட்டை வைத்துள்ளனர் என கூறியுள்ளார்.

ஆசிரியை மகாலட்சுமி மலைவாழ் பள்ளியில் சிறந்த சீர்திருத்தங்களை செய்து சிறந்த சேவை செய்வதாக அரசின் சார்பில் பல விருதுகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

6 minutes ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 hour ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

3 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

3 hours ago

This website uses cookies.