Categories: தமிழகம்

நடுரோட்டில் காரை நிறுத்தி குறட்டை விட்ட டிப் டாப் ஆசாமி : அடுத்த நிமிடமே வந்த போலீஸ்.. விசாரணையில் பகீர்.!!!

கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை நோக்கி வந்த கொண்டிருந்த கார் ஒன்று மேம்பாலத்திற்கு அருகில் சாலையிலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டிந்தது.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கக்கூடிய அந்த சாலையில் கார் நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரின் உள்ளே பார்த்தபோது ஒரு நபர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அந்த நபரை நீண்ட நேரமாக எழுப்ப முயற்சி செய்த போதிலும் அந்த நபர் எழுந்திரிக்காததால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார்(துடியலூர் காவல்நிலைய எல்லை) உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்ப முற்பட்டனர்.

காவல்துறையினரும் பொதுமக்களும் நீண்ட நேரமாக எழுப்பியும் அவர் எழுந்திருக்காததால் கார் கண்ணாடியை உடைத்துள்ளார். அப்போது அந்த நபர் அதிக குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் குடிபோதையில் இருந்த நபரை தட்டி எழுப்பி காரில் இருந்து வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதையில் இருந்த அந்த நபர் கோவை வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பதும், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் மன உளைச்சல் காரணமாக காலையிலேயே அதிகளவிலான மது அருந்தி வாகனத்தை ஓட்டி விபத்தை உண்டாக்கிவிட்டு பின்னர் வாகனத்தை ஓட்ட முடியாமல் சாலையிலேயே நிறுத்தி விட்டு உறங்கியது தெரியவந்துள்ளது. தற்போது இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை.. தேடிச் சென்ற வனத்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…

22 minutes ago

இனியும் இபிஎஸ் பற்றி இழிவு செய்தால்.. அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை!

தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…

41 minutes ago

மதுரை முருகன் மாநாட்டில் சூப்பர் ஸ்டார்? உறுதிப்படுத்திய ரஜினிகாந்த் தரப்பு?

மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…

1 hour ago

விரும்புகிற தெய்வங்களை அவரவர் வணங்குவது ஜனநாயக உரிமை.. முருகர் மாநாட்டுக்கு வாழ்த்துகள் : இபிஎஸ் அதிரடி!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…

2 hours ago

தலைவர் மாதிரி பேசுறதுக்கு இன்னும் பயிற்சி வேணும்? தனுஷை கண்டபடி கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…

கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…

2 hours ago

என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன் தெரியாது, ஜெய் ஹனுமான் தெரியும் : நடிகை நமீதா பெருமிதம்!

11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…

2 hours ago

This website uses cookies.