Categories: தமிழகம்

விளையாடச் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்.. எமன் வடிவில் வந்த மழை.. மதுரையில் பரிதாபம்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முசுண்டகிரி பட்டி கிராமத்தைச் சேர்ந்த தவமணி – கவிதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், மூன்றாவது மகன் பெரிய கருப்பு வயது (13) பெரிய கருப்பு.

இவர் தற்போது கோடை விடுமுறை என்பதால் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக, மின் கம்பத்திலிருந்து அங்குள்ள ஊராட்சி மின்மோட்டார் அறைக்கு மின் ஒயர் கொண்டு செல்ல வயர் தொய்வு ஏற்படாமல் இருப்பதற்காக ஊன்றப்பட்ட கம்பியில் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனை அறியாத சிறுவன் பெரிய கருப்பு விளையாடிக் கொண்டிருந்த போது எதர்ச்சியாக தொட்ட போது மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்துள்ளார். அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர்.

பரிசோதித்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே உயிர் இழந்ததை தெரிவித்தனர். இதனையடுத்து உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பின் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: நீட் தேர்வு ரத்து செய்யுங்க… திமுக ஏன் எதிர்க்குது இப்ப புரியுதா?இதுதான் சாட்சி : முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

விளையாடச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.