அதிவகேத்தால் நடந்த கோர விபத்து… கண்ணிமைக்கும் நேரத்தில் தலைநசுங்கி இளம் ஜோடி பரிதாப சாவு : ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2022, 2:18 pm
Accident - Updatenews360
Quick Share

கோவை செல்வபுரம் அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம் பெண் உட்பட இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு சவுரிபாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் மனோஜ் (வயது 19). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் பணியாற்றி வந்தார்.
இவர் தனது இரு சக்கர வாகனத்தில் பூலுவப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவலிங்கம் என்பரது மகள் ஆர்த்தி (வயது 19) என்பவருடன் தனது இரு சக்கர வாகனத்தில் பேரூர் சாலையில் சென்றுள்ளார்.

அப்போது செல்வபுரம் தில்லைநகர் அருகே சென்ற போது முன்னாள் சென்ற 56-எண் அரசு பேருந்தை இடது புறமாக முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையில் சரிந்து விழுந்தது.

இதில் அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி மனோஜ் மற்றும் ஆர்த்தி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அரசு பேருந்தை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த பிரபு என்பவரிடம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 719

0

0