புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவராக உள்ள மாலா ராஜேந்திரதுரைக்கும் ஒன்றிய ஆணையர் கருணாகரன் திலகவதி ஆகியோருக்கும் இடையே ஒப்பந்தப்புள்ளி பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை ஒன்றிய ஆணையர் அலுவலகத்தையும் ஒன்றிய பொறியாளர் அலுவலகத்தையும் நேற்று பூட்டு போட்டு பூட்டி சாவியை எடுத்துச்சென்ற சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூட்டு போட்டு பூட்டிய ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை மீது ஒன்றிய ஆணையர்கள் கருணாகரன் மற்றும் திலகவதி கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
ஆனால் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இரண்டாவது நாளாக இன்றும் ஒன்றிய ஆணையர் அலுவலகம் மற்றும் ஒன்றிய பொறியாளர் அலுவலகம் பூட்டப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளிக்க இருப்பதாக ஒன்றிய ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
This website uses cookies.